திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இனி புதிய கட்டுப்பாடு! ஆர்ஜித சேவைக்கு புக் செய்தவர்களுக்கும் கெடுபிடி
திருப்பதி: ஏழுமலையான் தரிசனம், தங்கும் அறைகள் மற்றும் ஆர்ஜித சேவைகளில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தையும், முறைகேடுகளையும் ஒழிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிரடியான புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது.
இதுவரை சாதாரண ஆதார் அட்டைகள் பயன்படுத்தப்பட்டபோது, போலி அட்டைகளை வைத்து சிலர் முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தனர். இதைத் தடுக்க, இனி 'ஆதார் அடிப்படையிலான முக அங்கீகாரச் சரிபார்ப்பு' (Aadhaar-based Face Recognition) முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன் (UIDAI) தேவஸ்தானம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தச் சரிபார்ப்பு முறைக்காக ஆந்திர அரசுடன் இணைந்து தேவஸ்தானம் செயல்படுகிறது. இதற்காக பதிவுக் கட்டணமாக இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.20 லட்சம். ஒவ்வொரு ஆதார் சரிபார்ப்புக்கு 4 பைசா.
e-KYC சரிபார்ப்புக்கு ₹3.40 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத விசேஷங்கள் மற்றும் உற்சவங்கள் ஏப்ரல் மாதம் திருமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள துணை ஆலயங்களில் நடைபெறவுள்ள முக்கிய விழாக்களை பார்க்கலாம்.
திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் ஆலயத்தில், ஏப்ரல் 10, 17, 24 வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு திருச்சி உற்சவம். ஏப்ரல் 11 மாலை 6:45 மணிக்கு கஜ வாகனத்தில் தாயார் வீதியுலா. ஏப்ரல் 30 முதல் மே 2 வரை வசந்தோற்சவம் நடைபெறும்; ஏப்ரல் 28 கோயிலாழ்வார் திருமஞ்சனம், ஏப்ரல் 29 அங்குரார்ப்பணம்.
ஸ்ரீ சுந்தர்ராஜ சுவாமி ஆலயத்தில் ஏப்ரல் 16 மாலை 7 மணிக்கு திருச்சி உற்சவம்; ஸ்ரீ பலராமகிருஷ்ண சுவாமி ஆலயத்தில் ஏப்ரல் 21 மாலை 7 மணிக்கு ஸ்ரீ கிருஷ்ண சுவாமிக்கு திருச்சி உற்சவம்; ஸ்ரீ சூரியநாராயண சுவாமி ஆலயத்தில் ஏப்ரல் 29 மாலை 5 மணிக்கு திருச்சி உற்சவம் நடைபெறும். ஸ்ரீ சீனிவாச சுவாமி ஆலயத்தில் ஏப்ரல் மாத சனிக்கிழமைகளில் காலை 8 மணிக்கு அபிஷேகம் உண்டு.
அப்பலாயகுண்டா ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி ஆலயத்தில்: ஏப்ரல் 7 செவ்வாய் காலை 8 மணிக்கு அஷ்டதள பாதபத்மாராதன சேவை; ஏப்ரல் 8, காலை 8 மணிக்கு அஷ்டோத்தர சத கலசாபிஷேகம்; ஏப்ரல் 12 காலை 10:30 மணிக்கு கல்யாண உற்சவம். ஏப்ரல் மாத வெள்ளிக்கிழமைகளில் காலை 7 மணிக்கு வஸ்திர அலங்கார சேவை, அபிஷேகம். ஏப்ரல் மாத ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி மூலவருக்கு அபிஷேகம்.
திருப்பதி செல்லும் பக்தர்கள் இந்த மாற்றங்களைக் கவனித்து, தங்கள் தரிசனத் திட்டங்களை அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications