சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் 3 கதிர் அறுக்கும் அரிவாள்கள்.. என்ன பலன் ஏற்படும்?

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: காங்கேயம், சிவன்மலை கோவிலில் ஆண்டவர் உத்தரவு பொருளாக கதிர் அறுக்கும் மூன்று அரிவாள்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் முன் வைக்கிறார்கள்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியிலுள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் ஆண்டவர் உத்தரவு பெட்டி தமிழகம் முழுக்க மிகவும் பிரசித்தி பெற்றது.

3 sickles have been submitted in Kangayam Sivanmalai Subramanyaswamy Temple

ஆண்டவர் உத்தரவு பெட்டியில் என்ன பொருளை கொண்டு வந்து வைக்க வேண்டும் என்று முருக பெருமானே பக்தர்கள் கனவில் தோன்றி சொல்வது வழக்கம்.

இந்த நிலையில்தான், நேற்று இந்த உத்தரவு பெட்டியில் கதிர் அறுக்கும் மூன்று அரிவாள்கள் வைத்து பூஜை நடந்தது. விசிலிங்கம்பாளையத்தை சேர்ந்த வேலுசாமி என்ற 80 வயது பக்தரின் கனவில், முருகன் தோன்றி, இந்த பொருளை, ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிட்டு, பணித்தாராம்.

ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கும் பொருளுக்கும், சமூகத்தில் நடைபெற உள்ள மாற்றங்களுக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது. தற்போது, மூன்று கதிர் அறுக்கும் அரிவாள் வைக்கப்பட்டுள்ளதை வைத்து பார்க்கும்போது, 3 வருடங்களுக்கு பிறகு இவ்வாண்டு நல்ல மழை பெய்துள்ளது, காவிரி உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது போன்றவற்றை குறிப்பதோடு, விவசாயம் செழிக்கும் என்பதற்கான முன் குறிப்பாகும் என்கிறார்கள், கோவில் சிவாச்சாரியார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+