பக்கவாட்டில் மோதிய லாரி.. திடீரென கழண்டு விழுந்த ஹெல்மெட்.. அவினாசியை அலற வைத்த விபத்து
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே லாரி மோதி ஸ்கூட்டரில் சென்ற ரம்யா என்ற இளம்பெண் தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த நாதம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவருடய மகள் ரம்யா , இவருக்கு 21 வயது ஆகிறது. ரம்யா அவினாசியில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தினமும் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.

புதன்கிழமையான நேற்று ரம்யா, தனது ஸ்கூட்டரில் நாதம்பாளையத்திலிருந்து அவினாசி நோக்கி சென்று கொண்டிருந்தார். அவினாசி மெயின் ரோடு சீனிவாசபுரம் அருகே வந்தார். அவருக்கு பின்னால் வேகமாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் லாரி ஓட்டுநர் ஸ்கூட்டரின் பக்கவாட்டில் பயங்கரமாக மோதியது. இதில் நிலைதடுமாறி அவர் ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார். விழுந்த வேகத்தில் அவர் அணிந்திருந்த ஹெல்மெட் கழன்று தனியாக விழுந்தது.
இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரம்யா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
இந்த விபத்து குறித்த புகார் அளிக்கப்பட்டது. அத்ன் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த லாரி டிரைவர் ராஜா மகன் ரமேசை (24) கைது செய்தனர்.
தலைகவசம் அணிந்திருந்தும் அது கழண்டு விழுந்த காரணத்தால் இளம் பெண் ரம்யா உயிரிழந்துள்ளார். தலைகவசம் அணியுபவர்கள் கண்டிப்பாக அதை சரியாக அணிய வேண்டும். தலையில் மாட்டிவிட்டு அதனை லாக் செய்தால் மட்டுமே ஹெல்மெட் அணிந்தும் பயனாக இருக்கும். மாறாக ஹெல்மெட்டில் தலையை சரியாக லாக் செய்யாமல் விட்டால், பெரும் விபத்து ஏற்படும் போது, நாம் தப்பிக்க வழி இல்லாமல் போய்விடும்.
அதேபோல் ஹெல்மெட்டை வாங்கி அணியாமல் விடுவதும் ஆபத்தில் போய் விடும். இளம் பெண் ரம்யா ஹெல்மெட்டை லாக் செய்யாமல் வந்தாரா அல்லது எப்படி என்பது கண்டிப்பாக நமக்கும் தெரியாது. எனினும் நாம் ஹெல்மெட் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
லாரி ஓட்டுபவர்களும் ஊருக்குள் வரும் போது மிதமான வேகத்தில் வருவதே நல்லது.பிரேக் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டால் அதனால் அநியாயமாக யாராவது உயிர் இழக்க நேரிடும். எனவே லாரி ஓட்டுநர்களும் கவனமாக செல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications