தவெக தொண்டர்களுக்காக அதிமுக குரல் கொடுக்கும்.. சீனுக்குள் வந்த பொள்ளாச்சி ஜெயராமன்.. என்ன நடந்தது?
திருப்பூர்: தவெக தொண்டர்களை கொடுமைப்படுத்தும் செயலில் ஈடுபட்டால், அதற்கு அதிமுக குரல் கொடுக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். அதிமுக மாபெரும் கூட்டணியை அமைக்கும் என்றும், அதற்காக பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
கரூர் சம்பவத்தில் இருந்து தவெக தலைவர் விஜய் மற்றும் தவெக மீது அதிமுக ஒரு நட்பு பாராட்டி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பாகவே விஜய்யை விமர்சிக்க வேண்டாம் என்று அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார். இதனால் அதிமுக - தவெக கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்பட்டது.

இதனிடையே நேற்று முன் தினம் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, அதிமுக தொண்டர் ஒருவர் தவெக கொடியுடன் கூட்டத்தில் இருந்தார். அதனை பார்த்து எடப்பாடி பழனிசாமி, "பிள்ளையார் சுழி போட்டாச்சு" என்று உற்சாகமாக பேசினார். இதனால் தவெகவை தங்களின் கூட்டணிக்குள் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாசி ஜெயராமன் பேசுகையில், தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான். கரூர் சம்பவத்திற்கு அதிமுக சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டால், ஸ்டாலினுக்கு ஏன் தயக்கம்? தவெக தொண்டர்களை பொய் வழக்கு போட்டு மிரட்டும் செயல்களில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது. இந்த வண்டி வெகுகாலம் ஓடாது.
தவெக தொண்டர்களை கொடுமைப்படுத்தும் செயலில் ஈடுபட்டால், அதனை எதிர்த்து அதிமுக குரல் கொடுக்கும். திமுகவையும், ஸ்டாலினையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். அதிமுக மாபெரும் கூட்டணியை அமைக்கும் என்றும், கூட்டத்தில் தவெகவினர் கலந்து கொண்டது அதற்கான பிள்ளையார் சுழி என்றும் சொல்லி இருக்கிறார்.
இதில் இருந்து நீங்களே புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தவெக தொண்டர்களுக்காக அதிமுக நேரடியாக குரல் கொடுக்கும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் பேசி இருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு மேற்கொண்ட நாமக்கல் பிரச்சாரத்திலும் தவெக கொடி அதிகமாக தென்பட்டது.
இதனால் தவெக தொண்டர்கள் அதிமுக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று விரும்புவது போன்ற தோற்றம் உருவாக்கப்படுவதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் கரூர் சம்பவத்திற்கு பின் கூட்டணி அமைக்க வேண்டும், கட்சிகள் மத்தியில் ஆதரவை திரட்ட வேண்டும் என்பதில் விஜய் குறியாக இருப்பதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
-
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
மார்ச் 30ல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்! முதல்வரின் கொளத்தூர் தொகுதி உட்பட.. 3 தொகுதிகளுக்கு அனுமதி -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
தேர்தல் பரப்புரை அனுமதிக்கும் திமுக அரசுக்கும் என்ன சம்பந்தம்? - விஜய்க்கு மா.சுப்பிரமணியன் கேள்வி -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications