கடல் முதல் ஆகாயம் வரை காங்கிரஸ் ஊழல் செய்துள்ளது.. திருப்பூரில் மோடி அதிரடி பேச்சு

திருப்பூரில் இன்று பாஜக சார்பாக நடத்தப்படும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    BJP banners in Tiruppur | பிரதமர் மோடியை வரவேற்கும் பாஜக பேனர்கள்!

    திருப்பூர்: இந்தியாவை இத்தனை வருடம் ஆண்ட பாஜக கடல் முதல் ஆகாயம் வரை ஊழல் செய்துள்ளது என்று திருப்பூரில் பேசிய பிரதமர் மோடி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

    பிரதமர் மோடி, இந்த வருடத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தமிழகம் வந்துள்ளார். சென்ற முறை, எய்ம்ஸ் மருத்துவமனையை அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி மதுரை வந்தார்.

    அதன்பின் திருப்பூர் பெருமாநல்லூரில் பெரிய பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.இதற்காக பெருமாநல்லூரில் பெரிய அளவில் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. பாஜக சார்பில் நடத்தப்பட்ட மிகப்பெரிய பொதுக்கூட்டங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள்.

    தமிழில் தொடங்கினார்

    தமிழில் தொடங்கினார்

    திருப்பூரில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். திருப்பூர் பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழில் பேசி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி. வணக்கம் என்று கூறி பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். பிரதமர் மோடியின் பேச்சை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மொழிபெயர்த்தார்.

    திருப்பூர்

    திருப்பூர்

    பிரதமர் மோடி தனது பேச்சில், கடுமையாக உழைக்கும் மக்களை கொண்டது திருப்பூர். தொழில்முனைவோர் நிறைந்த மண்ணை கொண்டது இந்த திருப்பூர். கயிலாயம், நொய்யல், அமராவதி உள்ள புண்ணிய பூமியில் உள்ள தமிழர்களுக்கு வணக்கம். தொழில்முனைவோர் பின்னலாடை தொழில் நடக்கும் திருப்பூர், நாட்டிற்கு உதாரணமாக திகழ்கிறது.

    விமானம்

    விமானம்

    நமோ என்ற செய்தியை தாங்கி வரும் டி-சர்ட் திருப்பூரில் தயாரிக்கப்பட்டதுதான்.தீரன் சின்னமலையும், திருப்பூர் குமரனும் பிறந்த ஊர் இது. வரலாற்றில் சுதந்திர தாகம் எப்போதும் உள்ள ஊர் திருப்பூர். திருச்சியில் விமான நிலைய விரிவாக்கத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. சென்னையிலும் விமான நிலைய விரிவாக்க பணிகள் இன்று துவங்கி உள்ளது.

    மெட்ரோ

    மெட்ரோ

    சென்னையில் புதிய மெட்ரோ சேவைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கிறது.மக்களின் வாழ்க்கையை சுலபமாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது பல்வேறு முன்னேற்ற திட்டங்களை நாங்கள் கொண்டு வந்து இருக்கிறோம். குமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் ஊழல் செய்துள்ளது.

    காங்கிரஸ் ஊழல்

    காங்கிரஸ் ஊழல்

    பல ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. ஆனால் அவர்களால் மக்களுக்கு எந்த விதமான பலனும் ஏற்படவில்லை. காங்கிரஸ் நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலை கொண்டது இல்லை. கடல் தொடங்கி ஆகாயம் வரை அனைத்திலும் ஊழல் செய்துள்ளனர். புரோக்கர் ஆட்சியை காங்கிரஸ் நடத்திக் கொண்டு இருந்தது, என்று மோடி தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+