அந்த பாஜக பிரமுகர்தான் எல்லாத்துக்கும் காரணம்.. மொத்தம் 7 பேராமே.. தூக்கிய போலீஸ்.. திருப்பூர் ஷாக்
இளைஞரை கடத்திய பாஜக பிரமுகரை போலீசார் தேடி வருகிறார்கள்
திருப்பூர்: ஆள் கடத்தல் விவகாரத்தில் ஒரு பாஜக பிரமுகர் ஈடுபட்டு வந்துள்ளார்.. இதையடுத்து, ஒரு போலீஸ்காரர், முன்னாள் ஆயுதப்படை காவலர் உட்பட 7 பேர் கைதாகி உள்ளனர்.. எல்லாவற்றிற்கும் மூல காரணமான பாஜக பிரமுகர் எஸ்கேப் ஆகி உள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன்.. 35 வயதாகிறது.. இவர் ஒரு கார் டிரைவர்... திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்..
சம்பவத்தன்று கோவை-பல்லடம் சாலையில் பெரும்பாளி பகுதியில் செல்லும்போது, 7 பேர் கொண்ட கும்பல் 3 கார்களில் மகேஸ்வரனை வழிமறித்தது.. அவரை கத்திமுனையில் கடத்தியும் சென்றுவிட்டது.

பாஜக விவசாய அணி செயலாளர்
இதையடுத்து இந்த கடத்தல் தொடர்பாக பல்லடம் போலீசாருக்கு தெரியவந்ததையடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணையும் ஆரம்பமானது... அப்போதுதான் குட்லக் ராஜேந்திரன் பெயர் அடிபட்டது.. இவர் ராமநாதபுரம் மாவட்ட பாஜகவின் விவசாய அணி செயலாளராக உள்ளார்.. இவரும், இவரது கூட்டாளிகளும் சேர்ந்துதான் மகேஸ்வரனை கடத்தியது தெரியவந்தது.

பாஜக பிரமுகர்
அதாவது, அந்த பாஜக பிரமுகர், தங்க பிஸ்கெட்டுகளை கடத்துபவராம்.. இலங்கையில் இருந்து தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வருவதுதான் குட்லக் ராஜேந்திரனின் பிரதான வேலை.. இப்படி கடத்தி வரப்பட்ட பிஸ்கெட்டுகளை, வியாபாரிகளிடம் கொண்டு போய் சேர்க்கவே, மகேஸ்வரனை வேலைக்கு வைத்துள்ளார். இப்படித்தான், கடந்த வருடம் மகேஸ்வரனிடம் 5 கிலோ தங்க பிஸ்கட்டுகளை குட்லக் ராஜேந்திரன் தந்து, யாரோ ஒருவரிடம் போய் ஒப்படைக்க சொன்னாராம்..

தங்க பிஸ்கட்
அதன்படியே அந்த பிஸ்கட்டுகளை வாங்கி கொண்டு மகேஸ்வரன் சென்றபோது, போலீசார் அவரை துரத்தியதாகவும், அதனால், தங்க பிஸ்கட்களை ரோட்டிலேயே தூக்கி வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் குட்லக் ராஜேந்திரனிடம் தெரிவித்துள்ளார்... ஆனால், இந்த காரணத்தை குட்லக் ராஜேந்திரன் ஏற்கவில்லை.. மகேஸ்வரன் பொய் சொல்வதாக நினைத்து, தங்கம் கடத்தி வர முதலீடு செய்து இருந்த யாசர் அராபத், முகமது ரிஸ்வான் ஆகியோரிடம் மகேஸ்வரனை ஒப்படைத்துள்ளார்...

வாடகை வீடு
ஆனால் அவர்களிடம் இருந்து மகேஸ்வரன் 2 மாசத்துக்கு முன்பு தப்பிஓடி வந்துவிட்டார்.. திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து வந்துள்ளார்.. இந்த விஷயம் குட்லக் ராஜேந்திரனுக்கும், அடைத்து வைத்த யாசர் அராபத், முகமது ரிஸ்வானுக்கும் எப்படியோ தெரிந்துவிட்டது.. பின்னர் மகேஸ்வரனை கடத்த திட்டமிட்டனர்...

காவலர்கள்
அதன்படியேதான், தங்களுக்கு தெரிந்த கோவை மாநகர போலீசில் பணியாற்றும் காவலர் ராஜேஸ்வரன் மற்றும் குட்லு, அன்பு, கார்த்தி, பாண்டி மற்றும் சிலருடன் திருப்பூர் வந்து மகேஸ்வரனை கடத்தி சென்றனர்... திண்டுக்கல் பகுதியில் செல்லும்போது போலீசார் துரத்துவதை அறிந்ததும் முகம்மது ரிஸ்வான், யாசர் அராபத் மற்றும் போலீஸ்காரர் ராஜேஸ்வரன் ஆகிய 3 பேரையும் இறக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

ஆயுதப்படை
அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.. அவர்களைத் தொடந்து, ஆயுதப்படையில் இருந்து பணி நீக்கம் செயப்பட்ட காவலர் கார்த்தி உள்ளிட்ட மேலும் 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், எல்லாவற்றிற்கும் மூலகாரணமான பாஜகவின் குட்லக் ராஜேந்திரனை இப்போது காணவில்லை.. எங்கோ தலைமறைவாகி உள்ளதால், அவரை தேடும் பணி நடக்கிறது.. அவரை பிடித்தால்தான் கடத்தல் தங்க பிஸ்கட்டுகள் குறித்த மேலும் தகவல்கள் தெரியவரும் என்கிறார்கள்.
-
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி!












Click it and Unblock the Notifications