தாராபுரத்தில் திமுகவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய பாஜக... இரவோடு இரவாக கிழித்துவீசப்பட்டதால் சர்ச்சை
திருப்பூர்: தாராபுரத்தில் பாசன சபைகளுக்கான தேர்தலில் மற்ற யாரும் போட்டியிட முடியாதவாறு திமுகவினர் தவிர மற்றவர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக பாஜக சார்பில் நகரம் முழுவதும் ஒட்டப்பட்ட கண்டன போஸ்டர்கள் இரவோடு இரவாக கிழிக்கப்பட்டன.
திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, பிஏபி, உப்பாறு பாசனத்தில் சுமார் 2.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த நிலையில் பாசன சபைகளுக்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. தாராபுரம் வட்டத்தில் உள்ள 31 பாசன சபை தலைவர்கள் மற்றும் 136 ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களுக்களுக்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடந்த 8 ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது.

இந்த பதவிகளுக்கு விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் திமுகவினர் தவிர்த்து மற்றவர்களின் மனுக்களை வாபஸ் பெற வைத்தும், சார் ஆட்சியரை கொண்டு மனுக்களை தள்ளுபடி செய்தும் போட்டியின்றி அக்கட்சி வெற்றி பெறும் வகையில் செயல்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்நிலையில் விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி சிவக்குமார் உப்பாறு பாசன சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் சிவகுமாரின் வேட்புமனுவை நிராகரித்தார். இதனை கண்டித்து கடந்த 9 ஆம் தேதி விவசாயிகள் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி கைதாகினர்.

Recommended Video
இந்நிலையில் திமுகவினர் பாசன தேர்தலில் தலையிட்டு குளறுபடி செய்வதாக குற்றம்சாட்டி பாஜகவினர் நகரம் முழு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவை அனைத்தும் இரவோடு இரவாக கிழிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications