போக்சோ வழக்கில் சிக்கிய பேராசிரியரை இன்னும் கைது செய்யாதது ஏன்? பாஜக நாராயணன் கண்டனம்!
திருப்பூர்: திருப்பூர் பல்லடம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட பேராசிரியர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டும், இதுவரை அவரை கைது செய்யாதது ஏன் என தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக காவல்துறை தலைவரின் கவனத்திற்கு, திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட தமிழ் துறை தலைவர் பாலமுருகன் என்பவர் மீது திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் நன்னடத்தை அலுவலர் கடந்த 28/07/2023 அன்று அளித்த புகாரையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை எண் 09/2023 படி வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், இது வரை குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்படவில்லை என்பது வியப்பளிக்கிறது, அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டியதும் காவல்துறையின் கடமை.
தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக காவல்துறை தலைவரின் கவனத்திற்கு,
— Narayanan Thirupathy (@narayanantbjp) August 11, 2023
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியிடம் தவறுதலாக நடந்து கொண்ட தமிழ் துறை தலைவர் பாலமுருகன் என்பவர் மீது திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் நன்னடத்தை அலுவலர் கடந்த…
மேலும், ஏற்கனவே இது போன்ற பாலியல் துன்புறுத்தல்களில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஈடுபட்டு வந்துள்ளது முதல் தகவல் அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. ஆகையால், மேலும், மாணவிகளுக்கு தொடர்ந்து இது போன்ற பாதிப்புகள் நிகழாவண்ணம், குற்றச் செயல்கள் நடைபெறாது தடுக்க வேண்டியது தமிழக காவல் துறையின் கடமை." எனத் தெரிவித்துள்ளார்.
-
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்!











Click it and Unblock the Notifications