Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆந்திராவில் ஒரு யூனிட் மணல் ரூ.1400.. தமிழ்நாட்டில் 7500 ரூபாய்.. கட்டுமான பொறியாளர்கள் புகார்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த விலை நிர்ணய ஆணையம் அமைக்க வேண்டும் என திருப்பூர் கலெக்டரிடம் இன்ஜினீயர்கள் மனு அளித்துள்ளனர். 3 யூனிட் எம்.சாண்ட் மண்ணை ரூ.10 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.22 ஆயிரத்து 500 ஆக உயர்த்தியுள்ளனர். ஆந்திராவில் 1 யூனிட் ரூ.1,400-க்கு அரசு கொடுக்கிறது என்றும், தமிழகத்தில் அடிக்கடி விலையேற்றத்தால் கட்டுமான பணியை விரைந்து முடிக்க முடியவில்லை என்றும் இன்ஜினியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

தமிழகத்தில் ஆற்று மணல் குவாரிகள் குறைவான எண்ணிக்கையில் செயல்படுவது ஒரு புறம் எனில், எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லி விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருவதால் கட்டுமானத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலையை உயர்த்திக் கொள்வதற்கு கல் குவாரிகள் மற்றும் கிரஷர் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததின் பேரில், ஒரு யூனிட் ஜல்லி விலை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், எம்.சாண்ட் விலை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாகவும், பி.சாண்ட் விலை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாகவும் அண்மையில் உயர்த்தப்பட்டது.

Construction engineers allege that a unit of sand costs Rs 1400 in Andhra and Rs 7500 in TN

கடைசியாக உயர்த்தப்பட்ட விலையுடன் ஒப்பிட்டால், கட்டுமானத்துக்கு தேவையான எம்.சாண்ட் விலை மட்டும் கடந்த 8 மாதங்களில் 4 முறை உயர்த்தப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனங்கள் இந்த விலை உயர்வை தாங்கவே முடியாத அளவிற்கு இருப்பதாக போர்க்கொடி உயர்த்தின. புதிய வீடுகளை கட்டுபவர்கள் கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியாத விலை உயர்வை சந்தித்தனர். ஏனெனில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு என்பது ஒரே ஆண்டில் 30 சதவீதம் அளவிற்கு அதிகம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், க்ரஷர் உரிமையாளர்களை அழைத்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் எம்.சாண்டு, பி.சாண்டு மற்றும் ஜல்லியின் உயர்த்தப்பட்ட விலையில் இருந்து ரூ.1000 குறைத்து விற்க உத்தரவிடப்பட்டது. இதேபோல் சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை டன் ஒன்றுக்கு ரூ.33 என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

எனினும் எம் சாண்ட் மற்றும் ஜல்லி விலையை ரூ.1900 ரூபாய் உயர்த்திவிட்டு, ஆயிரம் ரூபாய் மட்டுமே குறைத்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையிலேயே குற்றம் சாட்டினார். இந்நிலையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் தமிழக இன்ஜினீயர்கள் கிளப் சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் அவர்கள் கூறுகையில், கிரசர் உரிமையாளர்கள் ஒரு வருடத்தில் 4 முறை விலையை ஏற்றி 3 யூனிட் எம்.சாண்ட் மண்ணை ரூ.10 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.22 ஆயிரத்து 500 ஆக உயர்த்தியுள்ளனர். ஆந்திராவில் 1 யூனிட் ரூ.1,400-க்கு அரசு கொடுக்கிறது. அடிக்கடி விலையேற்றத்தால் கட்டுமான பணியை விரைந்து முடிக்க முடியவில்லை. கட்டுமான பொருட்கள் விலை நிரந்தரமாக இல்லாததால் கட்டுமான தொழில் நிலையற்றதாக மாறி வருகிறது.

கட்டுமான தொழில் சீராக நடக்க கல் குவாரிகளை அரசுடைமையாக்கி அரசே ஏற்று நடத்த வேண்டும். கட்டுமான துறை சார்ந்த அனைத்து பொருட்களின் விலையை அரசு நிர்ணயிக்க கட்டிட பொருட்கள் விலை நிர்ணய ஆணையத்தை உடனே அமைக்க வேண்டும். கட்டுமான பொருட்களின் விலையை அரசு நிர்ணயம் செய்யாவிட்டால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்" இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+