திருப்பூர் மாநகரில் அரசு புறம்போக்கில் குடியிருப்போருக்கு பட்டா கிடைக்குமா.. உதயநிதிக்கு கடிதம்
திருப்பூர்: திருப்பூர் மாநகரில் அரசு புறம்போக்கு நிலத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் 1,074 குடும்பத்தினருக்கு பட்டா விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம், திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. கடிதம் தந்து வலியுறுத்தியுள்ளார். திருப்பூர் மாநகர பகுதிக்கு உட்பட்ட அரசு நத்தம் புறம்போக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த ஒரு பகுதியினருக்கு கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் பட்டா வழங்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
திருப்பூர் வந்த துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. அளித்த கடிதத்தில் கூறுகையில், "திருப்பூர் மாநகர பகுதிக்கு உட்பட்ட அரசு நத்தம் புறம்போக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த ஒரு பகுதியினருக்கு கடந்த 2006-ம் ஆண்டு கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் பட்டா வழங்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் திருப்பூருக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

அதன்படி, 1,074 குடும்பத்தினருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கடிதம் அளித்தேன். அதன்படி கலெக்டர் நடவடிக்கை எடுத்து சில பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. விரைந்து பட்டா கிடைக்க துணை முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொங்கணகிரி பகுதியில் 184 குடும்பத்தினர், மிலிட்டரி காலனியில் 90 குடும்பத்தினர், அண்ணாநகர், பாண்டியன் நகர் ஒத்தலைன் பகுதியில் 50 குடும்பத்தினர், கொங்கணகிரி கோவில் தெற்கு பகுதியில் உள்ள நத்தம் புறம்போக்கில் வசிக்கும் 8 குடும்பத்தினர், தொட்டிப்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் 13 குடும்பத்தினர், காசிப்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில நீர்நிலை புறம்போக்கில் 36 குடும்பங்களில் 23 குடும்பத்தினருக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 13 குடும்பத்தினருக்கு பட்டா வழங்க வேண்டும்.
எம்.ஜி.ஆர்.காலனி காவேரியம்மன் திருமண மண்டபம் பின்புறம் நத்தம் புறம்போக்கில் வசிக்கும் 19 குடும்பத்தினர், சுகுமாறன்நகர் நொய்யல் ஆறு புறம்போக்கில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் வசிக்கும் 496 குடும்பத்தினர், முத்தையன்நகர் மேற்கு பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் வசித்து வரும் 201 குடும்பத்தினர் ஆகியோருக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அந்த கடிதத்தில் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. கூறியுள்ளார். இந்நிலையில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக துணை முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications