10 நிமிடம் தான்… வீட்டை பூட்டிக்கொண்ட பாப்பா ‘வர்ஷினி’ பத்திரமாக மீட்பு
Recommended Video
திருப்பூர்: திருப்பூரில் வீட்டினுள் தாழிட்டுக் கொண்ட ஒன்றரை வயது குழந்தையை பத்திரமாக தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
திருப்பூர் - நெருப்பெரிச்சல் பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம், பனியன் தொழிலாளி. இவரது மனைவி மீனாட்சி. இவர்களது ஒன்றரை வயது குழந்தை வர்ஷினி. நேற்று மாலை வீட்டினுள் விளையாடி கொண்டிருந்த போது, குழந்தை வர்ஷினி வீட்டின் இரும்பு கதவை திடீரென தாழிட்டுக் கொண்டாள்.

குழந்தை அழும் சத்தம் கேட்டு வெளியில் இருந்து ஓடி வந்த தாய் மீனாட்சி கதவை திறக்க முயன்ற போது, கதவை திறக்க முடியவில்லை. இதனையடுத்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புநிலைய அதிகாரி பாஸ்கரன் தலைமையிலான குழுவினர், ஓப்பனர் என்னும் புதிய கருவி மூலம் பத்து நிமிடங்களுக்குள்ளாக கதவை திறந்தனர். எவ்வித ஆபத்துமின்றி குழந்தை வர்ஷினி காப்பாற்றப்பட்டாள்.
இதுகுறித்து அதிகாரி பாஸ்கர் கூறுகையில், குழந்தைகளை தன்னிச்சையாக வீட்டினுள் விளையாட விட்டுவிட்டு பெற்றோர் அஜாக்கிரதையாக இருக்க கூடாது என்று கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications