இதுதான் மாத்திரை.. ஒரு நாளைக்கு 4 வாட்டி சாப்பிட்டா கொரோனா வராது.. திருப்பூர் டாக்டர் சொல்கிறார்
திருப்பூர்: பரவிவரும் கொரோனா வைரஸுக்கு ஹோமியோபதியில் தடுப்புமருந்து இருப்பதாகவும் , ஹோமியோபதி , சித்தா மருத்துவர்களையும் கொரோனா மருந்து கண்டறிவது குறித்து கலந்து ஆலோசிக்க வேண்டும் என ஹோமியோபதி மருத்துவர் ஒருவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
Recommended Video
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ். இதற்கு சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டாக்டர் கிங் என்பவர் ஹோமியோபதி மருத்துவத்தில் கொரோனா தடுப்பு மருந்து இருப்பதாகவும் , இதனை சுகாதாரத் துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும், இதில் எந்த பக்க விளைவும் கிடையாது. மாற்று மருத்துவத்தை அரசு கருத்தில் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
1 நாளைக்கு 4 மாத்திரை எடுத்துக் கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துவிடும் என்றும் அவர் கூறினார். மாத்திரையை காண்பித்தார். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா வராமல் தடுக்கும் என்கிறார் அவர்.
இது போன்ற நேரங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேத மருத்துவர்களையும் கலந்தாலோசிக்க வேண்டும் எனக்கோரி சுகாதார துறையிடம் இதுகுறித்து வலியுறுத்துமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
இதை முதல்வர் அல்லது, சுகாதாரத்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது, அவரது கோரிக்கையாக இருந்தது. உலகம் முழுக்க ஆய்வுகள் நடந்து வந்தாலும், இதுவரை, கொரோனா வைரசை குணப்படுத்தக் கூடிய மருந்து என்று எதுவும் சொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை!












Click it and Unblock the Notifications