Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பல்லடம் அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மனிதக் கழிவு வீச்சு! யார் அந்த மர்ம நபர்கள்?

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையத்தில் இயங்கி வரும் அரசு பள்ளி வகுப்பறையில் யாரோ மர்மநபர்கள் மனிதக் கழிவை வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 1ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

palladam police

இந்த பள்ளிக்கு இன்று காலை மீண்டும் மாணவர்கள் வருகை தந்தனர். அப்போது அவரவர் வகுப்புகளுக்கு சென்றுக் கொண்டிருந்தனர். அந்த வேளையில் 10ஆம் வகுப்புக்கான அறைக்கு மாணவர்கள் சென்ற போது அதிர்ச்சி அடைந்தனர்.

அங்கு ஜன்னலிலும் மாணவர்கள் உட்காரும் நாற்காலியிலும் மனிதக் கழிவை யாரோ வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து மாணவர்கள், தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்தனர்.

அவர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தார். இதையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து அந்த வகுப்பறையில் இருந்த கழிவை அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சுத்தப்படுத்தினர். இது போல் மனித கழிவை வீசி சென்றது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை இரவு நேரத்தில் பள்ளி அருகே சமூகவிரோத செயல்களில் ஈடுபட வந்தவர்கள் யாரேனும் இதை செய்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+