காவிரியின் நீர் வளத்தை ஆன்லைன் மூலம் அளவிட திட்டம்.. காவிரி ஒழுங்காற்று துணை குழு தீவிர ஆய்வு
உடுமலை: ஆன்லைன் மூலம் காவிரியின் நீர் வளத்தை அளவிட திட்டம் செயல்படுத்துவது குறித்து, அமராவதி அணை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் காவிரி ஒழுங்காற்று துணை குழுவினர் ஆய்வு நடத்தினர்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மூலம் அமைக்கப்பட்ட காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் அறிவுறுத்தலின் படி, துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு காவிரி நீர் பாயும் மாநிலங்களில் உள்ள நீர் தேக்கங்கள் மற்றும் அணைகளின் நீர்வரத்து மற்றும் நீர்வெளியேற்றத்தை கணக்கிட அமைக்கப்படும், ஆன்லைன் மானிட்டரிங் சிஸ்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உள்ளனர்.

கர்நாடகம்,தமிழகம்,புதுவை மற்றும் கேரள மாநில அதிகாரிகள் கொண்ட இந்த துணைக்குழு உரிய ஆய்வு நடத்தி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து உடுமலை அடுத்துள்ள அமராவதி அணை பகுதியிலும், முக்கிய நீர்பிடிப்பு பகுதியான தேனாறு, பாம்பாறு, சின்னாறு சேரும் இடமான ஜீரோ பாயின்ட் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று காவிரி நீர் ஒழுங்காற்று துணை குழுவினர் ஆய்வு நடத்தினர்.
மேலும் அமராவதி அணையின் உள்பகுதி, அமராவதி பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு கால்வாய்கள் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் நடந்தே சென்று பல்வேறு ஆய்வுகளை இக்குழுவினர் மேற்கொண்டனர். காவிரி நீர் பங்கீட்டின் போது அமராவதி அணைக்கு வரும் நீரும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
மத்திய நீர்வள ஆணைய கண்காணிப்புப் பொறியாளர் மோகன் முரளி, புதுவை பொதுப் பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் சுரேஷ், கேரள மாநில பாசன உதவி இயக்குநர் சஜ்வீப்குமார், இந்திய வானிலை அறிவியலாளர் அமுதா, அமராவதி அணை செயற்பொறியாளர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் சரவணன் உள்ளிட்ட பல அதிகாரிகள் இந்த ஆய்வை நடத்தினர்.
ஆய்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத்துறை இணை ஆணையர் மோகன் முரளி, இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் காவிரி நீரை பயன்படுத்தும் மாநிலங்கள் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது தான் என்றார்.
காவிரி ஒழுங்காற்று துணை குழுவினர் கர்நாடகாவில் 4 அணைகள் மற்றும் தமிழகத்திலுள்ள 3 அணைகளில் ஆய்வு நடத்தியுள்ளனர். மேலும் கேரளாவிற்கு சென்று அங்குள்ள அணைகளிலும் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்
இந்த ஆய்வுகளுக்கு பின்னர் காவிரி நீர் மேலாண்மை வாரியத்திடம் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications