அனிதாவின் வீடியோ கால்.. ஃபேனில் தொங்கிய துப்பட்டா.. அலறிய குடும்பம்.. திருப்பூரில் சோகம்!
நீட் தேர்வு பெண் பயிற்சியாளர் தற்கொலை செய்துகொண்டார்
திருப்பூர்: ரூமில் அனிதா ரெஸ்ட் எடுக்கிறார் என்றுதான் நினைத்தார்கள்.. ஆனால் திடீரென வந்த வீடியோகால் பார்த்ததும்தான் எல்லோரும் அதிர்ச்சி ஆனார்கள்.
திருப்பூர், சந்தராபுரம் என்பி நகர் பகுதியை சேர்ந்த தம்பதி ஈஸ்வரமூர்த்தி - சரஸ்வதி. இவர்களது 28 வயது மகள்தான் அனிதா. இவர் நீட் தேர்வுக்கு பயிற்சி அளித்து வந்தார்.

அனிதாவிற்கும் கோவையை சேர்ந்த கணேசனுக்கும் போன வருடம் ஜூலை மாதம் கல்யாணம் ஆனது. கோவையில் குடும்பம் நடத்தி வந்த நிலையில், மாமியார் வீட்டில் அனிதாவுக்கு சின்ன சின்ன பிரச்சனைகள் ஆரம்பமானது. அதனால், கணவனுடன் திருப்பூரில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டு பக்கம் குடியேறினார் அனிதா.
ஆனால் அனிதாவுடன் சண்டை போட்டு கொண்டு, கணேசன் அவர் அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார். கோபித்து கொண்டு போன கணவன் திரும்ப வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், கடைசிவரை கணேசன் வரவே இல்லை. இதனால் விரக்தி அடைந்த அனிதா அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மாலை தனது தம்பி அசோக்கிற்கு அனிதா வீடியோ கால் செய்தார். அதில் அழுது கொண்டே பேசினார். ஃபேனில் துப்பட்டா தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, என்ன நடந்தது என்று கேட்க முயன்றார். ஆனால் அதற்குள் அனிதா போனை கட் பண்ணிவிட்டார். இதெல்லாம் நடக்கும்நேரம், அனிதாவின் அம்மாவோ மகள் ரூமில் ரெஸ்ட் எடுத்து கொண்டிருப்பதாகத்தான் நினைத்தார்.
ஆனால் வீடியோ கால் பார்த்ததும் அதிர்ந்து போன தம்பி, ஏதோ விபரீதம் நடப்பதாக எண்ணி உடனடியாக தன்னுடைய அப்பாவுக்கு போன் செய்யவும், அவர் விரைந்து வந்து கதவை உடைத்து கொண்டு போய் பார்த்தார்
அப்போதுதான், அனிதா ஃபேனில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்ததும், குடும்பமே கதறி அலறி துடித்தது. தகவலறிந்து வந்த ஊரக போலீசார் அனிதாவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கல்யாணம் ஆகி ஒன்றரை வருடமே ஆவதால் ஆர்டிஓ செண்பகவள்ளி இந்த விசாரணையை கையில் எடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications