"முருகன்" போட்டியிடும் தாராபுரத்தில்.. நரேந்திர மோடிக்கு "வேல்" நினைவு பரிசு வழங்கி கவுரவித்த பாஜக
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: தாராபுரம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த நரேந்திரமோடிக்கு "வேல்" நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று நடைபெற்ற அதிமுக பாஜக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி முடித்ததும் பிரதமர் பேசுவதாக இருந்தது. அவர் பேசுவதற்கு முன்பாக அவருக்கு, வேல் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அதை கையில் வாங்கிக் கொண்டார் மோடி.

தனது உரையை ஆற்றத் தொடங்கும்போது, வெற்றிவேல் , வீரவேல் என்று தமிழில் அவர் பேச ஆரம்பித்தார். தாராபுரம் தொகுதியில் பாஜக தமிழக தலைவர் முருகன் அந்த கட்சி சார்பாக போட்டியிடுகிறார். அவர், முருகனின் அறுபடை வீடுகளுக்கும், வேல் யாத்திரை சென்றவர் என்பது இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications