எலிகளை புடிச்சி வறுத்து சாப்பிடுவோம் சார்.. அதிர வைக்கும் சிறுவர்கள்.. குவாரி தொழிலாளர்களின் அவலம்
திருப்பூர் அருகே எலிகளை பிடித்து சிறுவர்கள் சமைத்து உண்கிறார்கள்
Recommended Video
திருப்பூர்: "நாங்க எலிகளை புடிச்சி வறுத்து அப்படியே சாப்பிடுவோம் சார்.." என்று சொல்லும் சிறுவர்களின் பேச்சை கேட்டு வெளியூர்வாசிகள் திகைத்து போய் நிற்கிறார்கள்.
திருப்பூரை அடுத்த பல்லடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மங்களம் அருகே உள்ளது வேலம்பாளையம். இப்பகுதியில் கல்குவாரிகள் அதிகம். அதனால் இங்கு கூலித்தொழிலாளர்களும் அதிக எண்ணிக்கையில் வசித்துவருகின்றனர்.
இவர்கள் காலையில் வேலைக்கு சென்றுவிட்டால், சாயங்காலம் தான் வீடு திரும்புவது வழக்கம். இதனால் இவர்களது குழந்தைகளை யாருமே கவனிப்பதும் இல்லை, அவர்களை முறையாக பராமரிப்பதும் இல்லை.

வயல்வெளி
அப்பா, அம்மா வேலைக்கு போய்விடுவதால் இந்த பிள்ளைகளும் ஸ்கூலுக்கு போவது கிடையாதாம். இந்த கல்குவாரியை ஒட்டி விவசாய நிலங்களும் உள்ளன. அந்த வயல்வெளிகளுக்கு சிறுவர்கள் சென்றுவிடுகிறார்கள்.

எலிகள்
அங்கு ஓடியாடும் எலிகளை துரத்தி பிடிக்கிறார்கள். அந்த எலிகளையும் அங்கேயே கொன்று அதனை சமைத்து சாப்பிடுகிறார்கள். இதனை அப்பகுதி மக்கள் யாருமே கண்டு கொள்வதில்லை என்று தெரிகிறது.

நோய்கள்
இதை யாரோ ஒருவர் வீடியோ எடுத்ததுடன், ஒரு சிறுவனையும் கூப்பிட்டு கேட்கிறார். இந்த எலிகளை பிடித்து என்ன செய்வீர்கள் என்று. அதற்கு அந்த சிறுவன், "அப்படியே வறுத்து சாப்பிடுவோம்" என்று வெள்ளை சிரிப்புடன் சொல்கிறான். இது போன்று எலிகளை பிடித்து கொன்று சாப்பிட்டால் எத்தனையோ விதமான நோய்கள் தொற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது.

கோரிக்கை
இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு மேற்படி மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறப்பு குழுக்களை அமைத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications