ஸ்டாலின் நிலை தடுமாறி பேசுகிறார்... தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்
திருப்பூர்: ராகுல், பிரியங்கா என யார் வந்தாலும் பிரதமர் மோடியை அசைக்க முடியாது என்று பாஜ மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவதே நல்லது என்றும், போராடும் அரசு ஊழியர்கள் தமிழக வளர்ச்சியை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஸ்டாலின் நிலை தடுமாறி பேசுகிறார்; ஆறுமுகசாமி ஆணையத்தில் மோடியை விசாரிக்க சொல்கிறார், எதை பேசுகிறோம் என்று ஸ்டாலினுக்கே தெரியவில்லை எனவும் கூறினார்.
முன்னதாக, எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கி செயல் வடிவம் பெற குறைந்தது 4 ஆண்டுகளாகும். இப்படிப்பட்ட நடைமுறை அறிவாற்றல் இல்லாதவர் பிரதமரை முட்டாள் என்கிறார் என்று ஸ்டாலின் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்தார்.
English summary
Rahul, Priyanka will not be able to shake the prime minister says bjp state president Tamilisai
Story first published: Wednesday, January 30, 2019, 10:08 [IST]