ஸ்டாலின் நிலை தடுமாறி பேசுகிறார்... தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: ராகுல், பிரியங்கா என யார் வந்தாலும் பிரதமர் மோடியை அசைக்க முடியாது என்று பாஜ மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவதே நல்லது என்றும், போராடும் அரசு ஊழியர்கள் தமிழக வளர்ச்சியை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், ஸ்டாலின் நிலை தடுமாறி பேசுகிறார்; ஆறுமுகசாமி ஆணையத்தில் மோடியை விசாரிக்க சொல்கிறார், எதை பேசுகிறோம் என்று ஸ்டாலினுக்கே தெரியவில்லை எனவும் கூறினார்.
முன்னதாக, எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கி செயல் வடிவம் பெற குறைந்தது 4 ஆண்டுகளாகும். இப்படிப்பட்ட நடைமுறை அறிவாற்றல் இல்லாதவர் பிரதமரை முட்டாள் என்கிறார் என்று ஸ்டாலின் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்தார்.












Click it and Unblock the Notifications