திருப்பூரில் பெண் இன்ஸ்பெக்டர் மாயம்? குடும்ப பிரச்சினை காரணமா? ஆடியோவால் பரபரப்பு!
திருப்பூரில் பெண் இன்ஸ்பெக்டர் மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்லம் மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்லம். இவர் நேற்று இரவு முதல் காணவில்லை என சமூகவலைதளங்களில் ஒரு ஆடியோ வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில் இன்ஸ்பெக்டர் செல்லம் நேற்று இரவு 8.45 மணிக்கு தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஒரு காரில் வந்தார். அதன் பிறகு அந்த கார் ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.
திண்டுக்கல் பகுதியில் சென்ற போது அந்த கார் மாயமானது. அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தாலும் அவரது எண் சுவிட்ச் ஆப் என வருகிறது. இதையடுத்து அவரது தோழியான மற்றொரு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மதனா சக போலீஸாருக்கு வாட்ஸ் ஆப் மூலம் அவரது புகைப்படத்தை அனுப்பி கண்டிக்க வேண்டும் என பதிவிட்டு இருந்தார் என தெரிகிறது.
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் செல்லம் கிடைத்துவிட்டார் என மற்றொரு பதிவையும் சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தாராபுரம் டிஎஸ்பி தனராசுவிடம் கேட்டபோது மாயமானதாக கூறப்படும் இன்ஸ்பெக்டர் செல்லம் குடும்ப பிரச்சினை காரணமாக விடுப்பில் சென்றுள்ளார். இதற்கு மேல் ஒன்றும் கேட்காதீர்கள். எனக்கு தெரியாது என கூறினார்.












Click it and Unblock the Notifications