Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமர் மோடியின் அலுவலகத்தில் இருந்து பறந்து வந்த பதில்.. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: அமெரிக்காவின் 50 சவீத வரியால் திருப்பூரில் பாதிப்பு அதிகமாக உள்ளது.எனவே திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் திருப்பூர் ஆயத்த ஆடை தொழில் எதிர்கொண்டு வரும் நெருக்கடி காலத்தில் நிலையான வர்த்தகத்தை எட்ட தேவைப்படும் மத்திய அரசின் உதவிகள் குறித்து கடந்த 8-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்படடது. அதற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து பரிசீலிப்பதாக பதில் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தகம் பல லட்சம் கோடிக்கு மேல் நடக்கிறது. ஐடி, ஜவுளி, என்ஜினிரியரிங், மருந்து, கடல் உணவுகள், தோல் பொருட்கள் என பல்வேறு வகையில் ஏற்றுமதி நடக்கிறது இதற்கு பெரிய அளவில் வரிகள் இந்தியாவிற்கு கிடையாது ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்ற பின்னர், வர்த்தக பற்றாக்குறை உள்ள இந்தியா உள்பட பல்வேறு உலகநாடுகளிடம் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதித்து வருகிறார்.

Tiruppur exporters happy after reply letter from Prime Minister Modi s office

இந்தியாவுக்கு 25 சதவீதமும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததற்காக கூடுதலாக 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீதம் வரி விதித்து டிரம்ப் கடந்த உத்தரவிட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் இது நடைமுறைக்கு வந்தது. அமெரிக்காவை பொறுத்தவரை இந்தியா தான் மிகப்பெரிய ஏற்றுமதி நாடாக இருந்து வருகிறது. இந்த வரி ஏற்றம் காரணமாக இந்திய பொருட்கள் ஏற்றுமதி அடியோடு குறைந்திருக்கிறது. இதில் அதிகப்படியான பாதிப்பை திருப்பூர் தான் சந்தித்துள்ளது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் திருப்பூர் ஆயத்த ஆடை தொழில் எதிர்கொண்டு வரும் நெருக்கடி காலத்தில் நிலையான வர்த்தகத்தை எட்ட தேவைப்படும் மத்திய அரசின் உதவிகள் குறித்து கோரிக்கை மனுவை கடந்த 8-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து பிரதமரிடம் அனுப்பிய மனுவிற்கு, மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில் பதில் மனு பெறப்பட்டுள்ளது.

அந்த மனுவில், மத்திய அரசு 'சேப்' என்ற திட்டத்தின் வாயிலாக நிறுவனங்கள் தொழிலாளர் தங்குவதற்கு விடுதி கட்டமைப்பை ஏற்படுத்த 30 சதவீத மானியம் அறிவித்திருந்ததை 50 சதவீதம் என்ற அளவில் உயர்த்தி தரவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாகவும். விரைவில் அது குறித்து அறிவிப்பு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதிக்கான வட்டி மானியமாக நிறுவனங்கள் பெற்றுள்ள கடனுக்கான வட்டியில் 5 சதவீத அளவு மத்தி அரசு கடந்த டிசம்பர் மாதம் வரை வழங்கியிருந்த நிலையில், தற்போது தொடரவில்லை. இந்த திட்டம் இன்னும் 5 ஆண்டுகள் தொடர வேண்டும் என்ற கோரிக்கைக்கு சமீபத்திய நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அதற்கான முடிவு எடுக்கப்பட்டு விரைவில் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல் அமெரிக்க ஏற்றுமதி வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ஏற்றுமதிக்கென்ற அதன் மதிப்பில் 15 சதவீத ஊக்க தொகையை வழங்க வேண்டும் என கூறியிருந்த நிலையில் ஊக்கத்தொகை வழங்குவது உலக வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிரானது. இருப்பினும் தற்சார்புடைய துறையின் வாயிலாக கருத்துரு கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கருத்துக்கள் பெறப்பட்ட பின் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+