திருப்பூர் பல்லடத்தில் எங்கேயோ சென்ற கண்டெய்னர் லாரி.. ஸ்கூட்டரில் தாய் மகள்.. இப்படியுமா நடக்கும்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகரத்தின் நால்ரோடு சந்திப்பில் கண்டெய்னர் லாரி ஒன்று சென்றது. அந்த லாரி கோவையிலிருந்து வந்து கொண்டிருந்தது. பல்லடம் நகராட்சி அலுவலகம் அருகே எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி, திடீரென அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கவிழ்ந்தது. இதன் காரணமாக இருசக்கர வாகனத்தில் வந்த தாய்,மகள் இருவருமே இப்போது உயிருடன் இல்லை.
கோவையிலிருந்து பல்லடம் நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று இன்று காலை வந்து கொண்டிருந்தது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கன்டெய்னர் லாரி வந்த போது, பல்லடம் நகராட்சி அலுவலகம் அருகே எதிர்பாராத விதமாக கன்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது, அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த பல்லடத்தைச் சேர்ந்த தாய் மகாராணி (54), மகள் கிருத்திகா (30) இருவர் மீது கன்டெய்னர் விழுந்துவிட்டது.

அதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, அங்கு வந்த பல்லடம் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் இரண்டு பெண்களின் உடல்களை கிரேன் கொண்டு மீட்டனர். . இந்த, விபத்தால் திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பல்லடம் போலீஸார், தப்பியோடிய கன்டெய்னர் லாரி ஓட்டுநரைத் தேடி வருகிறார்கள்.
தூத்துக்குடி தலைமை ஆசிரியர்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறுவில் மோட்டார் சைக்கிள் மீது பள்ளிக்கூட வேன் மோதியதில் தலைமை ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார். கோவில்பட்டி முத்துநகரை சேர்ந்த 56 வயதாகும் ஐசக் தவராஜ் என்பவர் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் அருகே உள்ள கே.கைலாசபுரம் டி.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ஜான்சி தூத்துக்குடியில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகன் உள்ளனர். மகன் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படிக்கிறார். மகள் திண்டுக்கல்லில் உள்ள பொறியியல் கல்லூரியிலும் படித்து வருகின்றனர்.
நேற்று காலையில் கோவில்பட்டியில் இருந்து கயத்தாறு வழியாக ஐசக் தவராஜ் தனது பைக்கில் கே.கைலாசபுரத்தில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு சென்று கொண்டிருந்தார். வில்லிசேரி அருகே சென்றார். அப்போது எதிரே தனியார் பள்ளிக்கூட வேன் ஒன்று வந்தது. எதிர்பாராதவிதமாக திடீரென்று மோட்டார் சைக்கிளும், வேனும் நேருக்கு நேர் மோதின.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஐசக் தவராஜ் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் தலைமை ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளிக்கூட வேன் டிரைவரான மாரியப்பனை கைது செய்தனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications