Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரிதன்யா வழக்கில் திருப்பூர் முதன்மை நீதிமன்றம் அதிரடி .. கணவர், மாமியாரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் கைதான கணவர் கவின்குமார் மற்றும் அவரது மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோரின் ஜாமீன் மனுக்களை திருப்பூர் முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைக்காட்டிப்புதூரைச் சேர்ந்தவர் ரிதன்யா. 27 வயதான ரிதன்யா கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதியன்று அன்று கவின் குமார் என்பவரை மணந்தார். திருமணத்தின்போது, அவரது பெற்றோர் 300 சவரன் நகையையும், சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு சொகுசு காரையும் வரதட்சணையாக வழங்கியுள்ளனர்.

Rithanya Avinashi Kavin Kumar Tiruppur

ஜாமீன் மனு தள்ளுபடி

இருந்த போதிலும், கணவர் கவின் குமார், அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி, மற்றும் தாய் சித்ராதேவி ஆகியோர் கூடுதலாக 200 சவரன் நகையையும், பணத்தையும் கேட்டு ரிதன்யாவைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் வேதனை அடைந்த ரிதன்யா, ஜூன் 28 அன்று மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

இறப்பதற்கு முன், ரிதன்யா தனது பெற்றோருக்கு உருக்கமான ஆடியோ செய்திகளை அனுப்பியிருந்தார். இந்த ஆடியோக்களில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனக்கு அளித்த கொடுமைகளை ரிதன்யா பதிவு செய்திருந்தார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ரிதன்யா தற்கொலை சம்பவம் ஏற்படுத்தியது.

இதற்கிடையே, ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடந்த 4 ஆம் தேதி மாமியார் சித்ரா தேவியையும் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று பேரும் தங்களுக்கு ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதுவரை நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டிபுதூரை சேர்ந்தவர் அண்ணாதுரை. தொழில் அதிபரான இவர் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரது மகள் ரிதன்யா (வயது 27). இவருக்கும் கைகாட்டிபுதூர் ஜெயம்கார்டன் பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி-சித்ரா தேவி தம்பதியின் மகன் கவின்குமார் (27) என்பவருக்கும் கடந்த 2½ மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது, அவரது பெற்றோர் 300 சவரன் நகையையும், சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு சொகுசு காரையும் வரதட்சணையாக வழங்கியுள்ளனர்.

இருந்த போதிலும், கணவர் கவின் குமார், அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி, மற்றும் தாய் சித்ராதேவி ஆகியோர் கூடுதலாக 200 சவரன் நகையையும், பணத்தையும் கேட்டு ரிதன்யாவைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அதாவது, திருமணத்தின் போது வரதட்சணையாக பெண்ணின் வீட்டில் 500 பவுன் நகை தருவதாக கூறி 300 பவுன் நகை போட்டுள்ளனர். ரூ.70 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் மற்றும் ரூ.2½ கோடி செலவு செய்து மிகவும் ஆடம்பரமாக திருமணம் செய்து வைக்கப்பட்டது.

மாமனார், மாமியார் தான் காரணம்

ஆனால், மாமனாரும், மாமியாரும் ரிதன்யாவிடம் மீதமுள்ள 200 பவுன் நகை இன்னும் தரவில்லை என்று கூறி சித்ரவதை செய்தாதாக கூறப்படுகிறது. மேலும் கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேரும் மனரீதியாக ரிதன்யாவை துன்புறுத்தி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மனம் வெதுமி போன ரிதன்யா விபரீத முடிவை எடுத்துள்ளார்.

இறப்பதற்கு முன், ரிதன்யா தனது பெற்றோருக்கு உருக்கமான ஆடியோ செய்திகளை அனுப்பியிருந்தார். இந்த ஆடியோக்களில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனக்கு அளித்த கொடுமைகளை ரிதன்யா பதிவு செய்திருந்தார். தனது தந்தைக்கு அனுப்பிய வாட்ஸ் ஆப்பில் "மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க எனக்கு உடன்பாடு இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி தான் என்றும் என்னுடைய மரணத்திற்கு தனது கணவன் மற்றும் மாமனார், மாமியார் தான் காரணம் என்று உருக்கமாக அனுப்பி இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

நீதிபதி அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ரிதன்யா தற்கொலை சம்பவம் ஏற்படுத்தியது. இதற்கிடையே, ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடந்த 4 ஆம் தேதி மாமியார் சித்ரா தேவியையும் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று பேரும் தங்களுக்கு ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரிதன்யாவின் தந்தை அண்ணாத்துரை மற்றும் அவருடைய தரப்பு வக்கீல் ஆஜராகி, அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவித்தனர். கவின்குமார் தரப்பு வக்கீல் ஜாமீன் கோரினார்கள். இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி குணசேகரன், ரிதன்யா தரப்பின் இடையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டு, கவின்குமார் தரப்பின் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+