Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூரில் மீண்டும் ஒரு சோகம்.. வரதட்சணை கொடுமையால் திருமணமான 10 மாதங்களில் இளம்பெண் தற்கொலை!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் மீண்டும் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான 10 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் தாராபுரம் சாலை, பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த சுகந்தியின் மகள் பிரீத்தி (வயது 25). இவருக்கு, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சதீஸ்வர் (வயது 28) என்பவரை கடந்த ஆண்டு செப்டம்பர் 15 அன்று திருமணம் செய்து வைத்தனர்.

Tirupur Dowry Tragedy Woman Dies by Suicide 10 Months After Marriage Sparks Outrage

120 சவரன் நகை + இன்னோவா கார் + 25 லட்சம்

இந்தத் திருமணத்தின்போது 120 சவரன் நகை, 25 லட்சம் ரூபாய் ரொக்கம், மற்றும் 38 லட்சம் மதிப்பிலான இன்னோவா கார் உள்ளிட்டவை வரதட்சணையாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு சதீஸ்வரும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து கூடுதல் பணம் கேட்டு பிரீத்தியை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வந்ததாகக் கூறப்படுகிறது.

பிரீத்திக்கு பூர்வீக சொத்து மூலம் 50 லட்சம் ரூபாய் கிடைக்கவிருந்ததை அறிந்த சதீஸ்வரின் குடும்பத்தினர், அந்தத் தொகையையும் கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரீத்தி, கடந்த ஒரு மாதமாக தனது கணவர் வீட்டை விட்டு வெளியேறி, திருப்பூரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

வரதட்சணை கொடுமை

ஆனால், சதீஸ்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து பணம் குறித்து ப்ரீத்தியிடம் பேசி மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதைத் தாங்க முடியாத பிரீத்தி, நேற்று (ஆகஸ்ட் 5) மாலை தனது தாய் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இளம்பெண் தற்கொலை

இந்தச் சம்பவம் குறித்து நல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 10 மாதங்களில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டிருப்பதால் ஆர்டிஓ விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. பிரீத்தியின் உடல் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டது.

Tirupur Dowry Tragedy Woman Dies by Suicide 10 Months After Marriage Sparks Outrage

உடற்கூராய்வு முடிந்து உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கும் நேரத்தில், பிரீத்தியின் உறவினர்கள் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனை முற்றுகையிட்டு, சதீஸ்வர், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உறவினர்கள் போராட்டம்

அதைத் தொடர்ந்து, காவல் ஆணையர் ராஜேந்திரன், ஆரம்ப விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இருப்பினும், பிரீத்தியின் உறவினர்கள் உடலைப் பெற மறுத்துள்ளனர்.

அண்மையில் திருப்பூர் மாவட்டத்தில் ரிதன்யா என்ற இளம்பெண், கணவர் வீட்டாரின் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், திருப்பூர் பகுதியில் மீண்டும் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+