Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூர் திமுக மேயருக்கு ரூ.42,571 அபராதம்.. மின் திருட்டு புகாரில் மின்வாரியம் அதிரடி ஆக்‌ஷன்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் திமுக மேயர் தினேஷ்குமாருக்கு மின்சார வாரியம் ரூ.42,571 அபராதம் விதித்துள்ளது. மின் திருட்டு புகாரில் இந்த அபராதத்தை மின்சார வாரியம் விதித்துள்ளது. வீடு கட்டுமான பணிக்கு முறைகேடாக மின்சாரத்தை திருடிய புகாரில் இந்த அபராதமானது விதிக்கப்பட்டுள்ளது. எனினும் தன் மீதான குற்றச்சாட்டை மேயர் தினேஷ்குமார் மறுத்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சி மேயராக இருப்பவர் தினேஷ்குமார். இவர் சமீபத்தில் தனது வீட்டில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. இதற்காக மின் வாரியம் அனுமதியின்றி முறைகேடாக மின்சாரம் எடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக திமுக மேயருக்கு மின்சார வாரியம் அபராதம் விதித்துள்ளது.

tn-electricity-board-slaps-42-571-fine-on-tiruppur-dmk-mayor-for-power-theft

ரூ. 42,571 அபராதம் விதித்து மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. தனக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டை திமுக மேயர் தினேஷ்குமார் மறுத்துள்ளார். கடந்த 13.10.2025 ல் தற்காலிக மின் இணைப்பு வாங்கியதற்கு ரசீது உள்ளதாக கூறியுள்ள திருப்பூர் மேயர் தினேஷ்குமார், மின் கணக்கீடு செய்ய வந்தவர்கள் அதனை மாற்றாமல் கூடுதல் கட்டணம் பதிவிட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

மின் திருட்டு புகாரில் திருப்பூர் திமுக மேயர் தினேஷ்குமாருக்கு ரூ.42 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது திருப்பூர் மாநகராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து திருப்பூர் மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவாது:- 'மேயர் வீட்டில் ஏற்கனவே பழைய மின் இணைப்பு உள்ளது. கட்டுமான பணிக்கு தற்காலிக மின் இணைப்பு கேட்டு கடந்த மாதம் 8 ஆம் தேதி விண்ணப்பித்து அதற்கான பணத்தையும் செலுத்திவிட்டனர். தற்காலிக மின் இணைப்பை புதிதாக வழங்குவதா? அல்லது ஏற்கனவே இருந்த பழைய இணைப்பை தற்காலிக மின் இணைப்பாக மாற்றுவதா? என்று முடிவு செய்ய அந்த பகுதி மின்வாரிய அதிகாரிக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதற்குள் பறக்கும்படையினர், கூடுதல் கட்டணம் விதித்துவிட்டனர். அந்த கட்டணத்தையும் மேயர் தரப்பில் இருந்து செலுத்திவிட்டார்கள். மின்வாரிய தரப்பில் ஏற்பட்ட குழப்பத்தில் இந்தநிலை ஏற்பட்டுள்ளது. உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். திருப்பூர் தாராபுரம் ரோடு புதுக்காடு கே.என்.பி. சுப்பிரமணிய நகரில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் வீடு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+