பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்.. புகை மண்டலம்.. அவினாசி முழுக்க பவர் கட்
Recommended Video

திருப்பூர்: அவினாசி துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டதால், அவினாசி நகரம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், தொழிற்சாலைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
திருப்பூர் மின் பகிர்மான வட்டம் அவினாசி கோட்டத்தில் உள்ள ஆட்டயம்பாளையம் துணை மின் நிலையத்தில் இன்று காலை தீடீரென இரண்டு டிரான்ஸ்பர்கள் வெடித்து தீ பற்றியது.

இதனால் இந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. டிரான்ஸ்பர் வெடித்ததால் அவிநாசி நகர் மற்றும் 31 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சாரம் இன்றி தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களில் வேலைகள் முடங்கின.
தொழிலாளர்கள் பெரும் பாடுபட்டு வருகின்றனர். அவினாசி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பல மணிநேரம் போராடி தீ யை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தற்போது தற்காலிகமாக புதிய திருப்பூர் மின் துணை மின் நிலையத்தில் இருந்து விநியோகம் ஒரு சில இடங்களுக்கு மட்டும் விடப்பட உள்ளது. பல்வேறு பகுதிகளில் இன்னும் மின்சாரம் வழங்க வில்லை. மின்சார டிரான்ஸ்பர் வெடித்ததால் அவினாசி யில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications