தமிழகத்தில் விரைவில் பாதுகாப்பு தளவாடம் அமைக்கப்படும்.. திருப்பூரில் பிரதமர் மோடி வாக்குறுதி!
இந்திய பாதுகாப்பு துறையை காங்கிரஸ் கட்சி மதிக்கவில்லை, பாஜகதான் இந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தி உள்ளது என்று திருப்பூர் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
திருப்பூர்: இந்திய பாதுகாப்பு துறையை காங்கிரஸ் கட்சி மதிக்கவில்லை, பாஜகதான் இந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தி உள்ளது என்று திருப்பூர் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். தமிழகத்தில் விரைவில் பாதுகாப்பு தளவாடம் அமைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று தமிழகம் வந்தார் பிரதமர் மோடி. பின் அவர் திருப்பூரில் பல நலத்திட்டங்களை தொடங்கியும், அடிக்கல் நாட்டியும் வைத்தார்.
அதன்பின் அவர் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசினார். இதில் காங்கிரஸ் மீது மோடி சரமாரியான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

ஊழல் செய்தனர்
மோடி தனது பேச்சில், நம் நாட்டில் ஊழல் செய்து புரோக்கர்கள் எல்லோரும் காங்கிரசுக்கு நெருக்கமானவர்கள். பாதுகாப்புத்துறை தளவாட பணிகளுக்கு பாஜக முக்கியத்துவம் அளிக்கிறது. தமிழகத்திலும் ஒரு பாதுகாப்பு தளவாடம் அமைக்கப்பட உள்ளது. 2 பாதுகாப்பு பூங்காக்களில் ஒரு பூங்கா இங்குதான் அமைக்கப்படுகிறது.

40 ஆண்டு
40 ஆண்டுகளாக ராணுவ வீரர்கள் ஒரே மாதிரியான வருமானத்திற்காக கோரிக்கை வைத்தனர்.ஆனால் அதை காங்கிரஸ் கொண்டு வரவே இல்லை. இந்திய ராணுவம் புரட்சி செய்ய முயன்றதாக காங்கிரஸ் கூறுகிறது. காங்கிரஸ் கூறுவது முழுக்க முழுக்க பொய். இந்திய ராணுவம் அப்படி ஒருநாளும் செய்யாது.

இந்தியருக்கான் அரசு
பாஜக அரசு ஒவ்வொரு இந்தியருக்குமான அரசாங்கம்.மக்களின் எதிர்காலத்தை நாங்கள் உறுதிப்படுத்துவோம். இரண்டு மடங்கு வேகத்தில் நாங்கள் சாலைகளை அமைத்து வருகிறோம். சாகர் மாலா திட்டம் விரைவில் கொண்டு வரப்படும். இந்தியா மிக வேகமாக வளரும் நாடாக மாறி இருக்கிறது.

மருத்துவம்
ஆயுஷ்மான் திட்டம் மூலம் மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி சென்றுள்ளனர். இந்தியாவின் பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆயுஷ்மான் திட்டம்தான். 11 லட்சமும் பேர் ஆயுஷ்மான் திட்டம் மூலம் பயன்பெற்று இருக்கிறார்கள். 2022க்கு முன் அனைத்து மக்களுக்கும் வீடு கட்டித்தரப்படும். வீடு என்பது வெறும் சுவர் மட்டுமல்ல : அது மரியாதை, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications