திருப்பூருக்கு பேரிடியை இறக்கிய அமெரிக்கா.. டிரம்பால் தலைகீழாக மாறப்போகுது.. பறந்த கோரிக்கை
திருப்பூர்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்திருப்பதன் காரணமாக, திருப்பூர் மின்னலாடை ஏற்றுமதி பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. அதேபோல் இந்தியாவின் போட்டி நாடுகளான வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கான வரி விதிப்பை குறைத்து டிரம்ப் அறிவிப்பு வெளியிட்ட அறிவிப்பும் புதிய சிக்கலை திருப்பூருக்கு கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அறிவித்துள்ளார். இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது இந்த வரி விதிப்பால் திருப்பூர் மின்னலாடை ஏற்றுமதி பாதிப்புக்கு உள்ளாகி வரும் சூழலில் மீண்டும் பேரிடியை அமெரிக்கா இறக்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் போட்டி நாடுகளான வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கான வரி விதிப்பை குறைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வங்கதேசத்திற்கு வரி குறைப்பு
இதன் மூலம் 30% இருந்த வங்கதேசத்தின் வரி 20 சதவீதமாக குறைந்திருக்கிறது. அதேபோல் பாகிஸ்தானுக்கு 19 சதவீத வரியையும், இலங்கைக்கு 20% வரியையும் அறிவித்துள்ளது இதன் மூலம் நமது போட்டி நாடுகளுக்கு குறைவான வரி இருப்பதால் இந்தியாவிற்கான அமெரிக்க ஆர்டர்கள் பெருமளவு குறையும் நிலை உருவாகி இருக்கிறது.
அமெரிக்காவிற்கு 39 சதவீதம் ஏற்றுமதி
ஏற்கனவே அமெரிக்காவிற்கு 30 சதவீத ஏற்றுமதி இந்தியாவில் இருந்து நடைபெற்று வரும் சூழலில், இந்தியாவிற்கான வரி விதிப்பு 25 சதவீதம் என்பதால் ஆர்டர்கள் குறைய வாய்ப்பு உருவாகி இருந்த சூழலில் தற்பொழுது போட்டி நாடுகளுக்கு வரியை மேலும் குறைத்துள்ளதால் அமெரிக்க ஆர்டர்கள் முற்றிலும் கைவிட்டுப் போகும் சூழல் உருவாகியுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன்
இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், "அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்த இந்தியாவின் சதவீத வரி நேற்று அமலுக்கு வந்த சூழலில் இன்று மறு அறிவிப்பாக நமது போட்டி நாடுகளுக்கான வரி விதிப்பை குறைத்து வெளியிட்டுள்ளார் இது நமது ஏற்றுமதியை வெகுவாக பாதித்துள்ளது.












Click it and Unblock the Notifications