Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூர் மாநகராட்சி மேயர் யார்? வரிந்துகட்டி நிற்கும் அந்த 3 பேர்! பரபரக்கும் டாலர் சிட்டி!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: டாலர் சிட்டி என்றழைக்கப்படும் திருப்பூர் மாநகராட்சியின் மேயர் பதவியை கைப்பற்ற திமுகவில் 3 முக்கியப் பிரமுகர்கள் காய் நகர்த்தி வருகிறார்கள்.

திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், முன்னாள் எம்.எல்.ஏ.கோவிந்தசாமி, திருப்பூர் வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ் ஆகிய மூவரில் ஒருவரே மேயர் நாற்காலியில் அமருவார்கள் எனக் கூறுகிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள்.

தேர்தல் முடிவு வெளியான அடுத்தநாளே சென்னைக்கு சென்று முகாமிட்டு திருப்பூர் மேயர் பதவியை கைப்பற்ற அவரவர் தனி லாபி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் மாநகராட்சி

திருப்பூர் மாநகராட்சி

திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் திமுக கூட்டணி 37 வார்டுகளில் பெற்றிபெற்றிருக்கிறது. இதன் மூலம் மேயர் பதவியை இந்த முறை திமுக கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. அந்த வகையில் திமுகவில் யார் மேயர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்கள் என்பது தான் இப்போது அங்கு எழுந்துள்ள மில்லிடன் டாலர் கேள்வியாகும். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனின் தீவிர ஆதரவாளரான திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் மேயர் ரேஸில் முதலிடத்தில் இருக்கிறார்.

யார் மேயர்?

யார் மேயர்?

கட்சியில் படிப்படியாக உயர்ந்து இன்று மாவட்டப் பொறுப்பாளர் வரை பத்மநாபன் வந்திருக்கிறார். இவரை மேயராக்க அமைச்சர் சாமிநாதன் முதலமைச்சரிடம் பரிந்துரை செய்வார் எனத் தெரிகிறது. இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து திமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ.கோவிந்தசாமியும் மேயர் கனவுடன் வலம் வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தேமுதிகவிலிருந்து திமுகவில் இணைந்த தினேஷும் மேயர் பதவியை எதிர்பார்த்து காய் நகர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கூட்டணிக் கட்சிகள்

கூட்டணிக் கட்சிகள்

இதனிடையே திருப்பூர் மாநகராட்சியை கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் திமுகவிடம் எதிர்பார்த்து வருவது கூடுதல் தகவலாகும். ஆனால் இதற்கு வாய்ப்பு குறைவு என்றும் துணை மேயர் பதவி வேண்டுமானால் கம்யூனிஸ்ட் கட்சிக்கோ, காங்கிரஸ் கட்சிக்கோ ஒதுக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மறைமுகத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

முக்கிய மாநகராட்சி

முக்கிய மாநகராட்சி

திருப்பூர் மாநகராட்சியை பொறுத்தவரை வளம் கொழிக்கும் மாநகராட்சியாக பார்க்கப்படுவதால் அங்கு மேயர் பதவிக்கு கடும் போட்டி உருவாகியுள்ளது. மேயர் பதவியை குறிவைத்து மூன்று பேர் கொண்ட மும்முனைப் போட்டியில் இல.பத்மநாபன் முந்திநிற்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+