Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்சியில் விரட்டி விரட்டி இளைஞர் படுகொலை.. ஸ்ரீரங்கத்தில் ஷாக்! சிறார்கள் உட்பட 11 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் நடந்த இளைஞா் கொலை வழக்கில் 2 சிறாா்கள் உள்ளிட்ட 11 பேரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனா்.

திருச்சி ஸ்ரீரங்கம் திருவளா்சோலை பகுதியில் சனிக்கிழமை இரவு இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதல் சம்பவத்தில் ஜா.நெப்போலியன் (29) என்ற இளைஞா் படுகொலை செய்யப்பட்டாா். மேலும் கா. கதிரவன் (40), சே. சங்கா் குரு (37), ரா.கமலேஷ் (20), ஜீவானந்தம் ஆகியோருக்கு கத்திக்குத்து காயங்களும், மேலும் 6 பேருக்கு ரத்தக் காயங்களும் ஏற்பட்டன. காயமடைந்தவா்கள் திருச்சி மற்றும் தஞ்சை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Crime Trichy Srirangam

இதனிடையே இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய நபா்களை போலீஸாா் உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்டவா்களின் உறவினா்கள் ஸ்ரீரங்கம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா். தொடா்ந்து அசம்பாவிதங்களைத் தடுக்க திருவளா்சோலை பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் கொலை தொடா்பாக ஸ்ரீரங்கம் போலீஸாா் விசாரணை நடத்தி, திருவளா்ச்சோலையை சோ்ந்த க. விக்னேஷ் (35), லால்குடி எசனைகோரையைச் சோ்ந்த வி.அஜய் (23), உ. சரண்ராஜ் (23), செ. ஆனந்த் பாபு (26), திருவளா் சோலையைச் சோ்ந்த பி. மனோஜ் குமாா் (19), பி. ரஞ்சித் (27), த. முருகானந்தம் (27), ரா. பிரபாகரன் (24), த. வினோத் (21) மற்றும் 16, 17 வயது சிறாா்கள் உள்பட 11 பேரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனா். இதில் தலைமறைவாக உள்ள பிரசாத், அப்பு ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.

இந்தக் கொலை சம்பவத்தில் தொடா்புடையவா்களை கைது செய்யாததால் உயிரிழந்த நெப்போலியன் சடலத்தை அவரது உறவினா்கள் வாங்க மறுத்து விட்டனா். இந்நிலையில் தொடா்புடையவா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதையடுத்து கொலையானவரின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்குப் பின்னா் உறவினா்கள் பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனா்.

அசம்பாவிதங்களை தடுப்பதற்காக திருவளா்ச்சோலை மற்றும் பிரேதப் பரிசோதனை நடைபெறும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் போலீஸாா் 2-ஆவது நாளாகக் குவிக்கப்பட்டனா். இதனால் அப்பகுதியில் தொடா்ந்து பதற்றம் நிலவியது. இதற்கிடையில் உறவினா்களிடம் நெப்போலியனின் சடலம் ஒப்படைக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சடலம் திருவளா்ச்சோலை கொண்டு செல்லப்பட்டது. கைது செய்யப்பட்ட சிறாா்கள் இருவரும் சிறாா் கூா்நோக்கு இல்லத்திலும், மற்றவா்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனா்.

சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருச்சியில் 2 சிறார்கள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+