கட்டுப்பாட்டை இழந்த கார்.. எதிர் திசையில் அரசு பஸ் மீது பாய்ந்து 5 பேர் பலி.. திருச்சியில் சோகம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அருகே மணப்பாறையில் நடந்த விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகிவிட்டனர். மேலும் படுகாயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கார் கல்கொத்தானூர் அருகே கட்டுப்பாட்டை இழந்தது. இதில் எதிர்திசையில் வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகிவிட்டனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 20 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கார் டிரைவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications