தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த சீமான் மீது தேசதுரோக வழக்கு போடுங்க.. திருச்சி எஸ்பியிடம் வக்கீல் மனு
திருச்சி: தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுத்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று திருச்சி போலீசில் மணப்பாறை வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் புகார் மனு கொடுத்துள்ளார். திருச்சி எஸ்.பி. வருண்குமாரிடம் இந்த புகார் மனுவை முரளி கிருஷ்ணா கொடுத்துள்ளார்.
திருச்சி எஸ்.பி. வருண்குமாரிடம் மணப்பாறை வழக்கறிஞர் முரளிகிருஷ்ணா கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: எக்ஸ் தளத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'தமிழ்த் தாய் வாழ்த்தில் 2 வரியை தூக்கியதற்காக கொந்தளிப்பதா?" என்ற தலைப்பில் நான் ஆட்சிக்கு வந்த உடன் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது என்று மிகவும் கண்ணிய குறைவாகவும், தமிழ்த் தாய் வாழ்த்தை அவமரியாதை செய்கிற நோக்கத்தோடும் ஆணவத்துடனும் பேசிய பேச்சுகளும் குறிப்புகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் கடந்த 21-ந் தேதி சிகிச்சை பெற்றேன்.

சீமான், தமிழ்த் தாய் வாழ்த்தை மிகவும் கொச்சைப்படுத்தி அரசின் உத்தரவு இல்லாமல், தான்தோன்றித்தனமாக தமிழ்த் தாய் வாழ்த்தை மிகவும் கேவலமாகவும், அருவறுக்கத்தக்க வகையில் தொடர்ந்து பேசி வருவதால் மாணவர்கள்- இளைஞர்கள்- குழந்தைகள் மத்தியில் தமிழ்த் தாய் வாழ்த்து பற்றியும் அதன் மீதான நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாலும் தமிழ் மொழியின் தொன்மை பாதித்து தமிழர்களுக்கு அவமரியாதை ஏற்பட்டுள்ளதால் சீமான் மீது BNSS-ன் படி கடும் நடவடிக்கை எடுத்து (குற்றவியல்) மேலும் தேசதுரோக வழக்கினை பதிவு செய்து அவருக்கு கடும் தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி எஸ்.பி. வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் ஏற்கனவே கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இழிவுபடுத்தி கொலை மிரட்டல்கள் விடுத்திருந்தனர். இதனால் நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்டோருக்கு எதிராக திருச்சி எஸ்பி வருண்குமார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications