திருச்சியில் சம்பவம்... குண்டர் சட்டத்தின் கீழ் 37 பேர் மீது நடவடிக்கை
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 2018-ம் ஆண்டு 1,564 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குண்டர் சட்டத்தின் கீழ் 37 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த ஆண்டில் மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர், விபசார தொழில் நடத்திய 2 பேர் உள்பட மொத்தம் 37 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

3,347 வழக்குகள் பதிவு
வழிப்பறி, சங்கிலி பறிப்பு ஆகிய சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளிடம் இருந்து 82 சதவீதம் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாராயம் விற்பனை உள்பட இந்த ஆண்டு மட்டும் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் 3,347 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதில் 2 பேர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

1,564 சாலை விபத்து
கடந்த 2017-ம் ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் நடந்த சாலை விபத்துகளில் 419 பேர் இறந்தனர். 2018-ம் ஆண்டு சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்து 312 பேர் இறந்துள்ளனர். 2018-ம் ஆண்டில் மட்டும் 1,564 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாகனம் மூலம் விழிப்புணர்வு
விபத்துகள் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் சாலைவிதிகளை பிரதிபலிக்கும் எல்.இ.டி. டி.வி. அடங்கிய வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக நடைமுறைப்படுத்தி விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

விழிப்புணர்வு முகாம்கள்
திருச்சி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications