56 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக மணப்பாறை நகராட்சியைக் கைப்பற்றியது அதிமுக!
திருச்சி: மணப்பாறை நகராட்சியை முதன்முறையாக அதிமுக கைப்பற்றியுள்ளது. அதிமுக சார்பில் சுதா பாஸ்கரன் நகராட்சித் தலைவராக தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்.
தமிழகத்தில் பிப்ரவரி 19ல் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் திமுக அதிகமாக வென்றிருந்தது.
திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பல இடங்களை திமுக கட்சி கைப்பற்றியது. மணப்பாறை நகராட்சியில் திமுக மற்றும் அதிமுக சமமான வெற்றிகளைப் பெற்றது.

மணப்பாறை
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிக்கும் கடும் போட்டியில் முதல் முறையாக அ.தி.மு.க வசமானது. மணப்பாறை நகராட்சியில் உள்ள மொத்தம் 27 வார்டுகளில் தி.மு.க கூட்டணி 11 இடங்களிலும், அதிமுக 11 இடங்களிலும் வெற்றி பெற்று சமபலத்தடன் இருந்தது.

சுயேட்சைகள்
இதில் வெற்றி பெற்ற 5 சுயேட்சைகள் தீர்மானிப்பவர்களே மணப்பாறை நகராட்சியை கைப்பற்ற முடியும் என்ற நிலையில் மறைமுக தேர்தல் இன்று காலை நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க சார்பில் நகர்மன்ற தலைவர் பதவிக்கு கீதா.மைக்கேல்ராஜ் என்பவரும், அதிமுக சார்பில் சுதா பாஸ்கரன் போட்டியிட்டனர்.

வெற்றி
மறைமுக தேர்தலில் மொத்தம் பதிவான 27 வாக்குகளில் அதிமுக வேட்பாளர் 15 வார்டுகளில் திமுக வேட்பாளர் 12 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து அதிமுகவைச் சேர்ந்த சுதா பாஸ்கரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். சுமார் 56 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக மணப்பாறை நகராட்சி அதிமுக கைப்பற்றியுள்ள நிலையில் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொண்டாட்டம்
மணப்பாறையில் சுயேட்சைகள் உதவியுடன் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது. இதையடுத்து சுதா பாஸ்கரன் நகராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து மணப்பாறை நகர செயலாளர் பவுன் ராமமூர்த்தி, தெற்கு மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, முன்னாள் நகர செயலாளர் ஷரீப் மற்றும் அதிமுக நிர்வாகிகள் வெடி வெடித்து இனிப்புகளை வழங்கினார்கள்.












Click it and Unblock the Notifications