இனி செப் 9 முதல் திருச்சி டூ மும்பை.. வாரத்தில் 4 நாட்களுக்கு விமான சேவை தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியிலிருந்து மும்பைக்கு இனி வாரத்தின் நான்கு நாள்களுக்கு விமானச் சேவை தொடங்கப்படவுள்ளது. இந்த சேவை வரும் 9-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதன்படி திருச்சியிலிருந்து மும்பைக்கு வாரத்துக்கு 4 முறை இன்டிகோ விமானங்கள் இயக்கப்படவுள்ளன. மும்பையிலிருந்து மாலை 3.35-க்குப் புறப்படும்விமானம் (6இ- 6265) திருச்சிக்கு மாலை 5.45 மணிக்கு வந்து சேரும்.

இதேபோல, திருச்சியிலிருந்து (6இ- 6267) மாலை 6.20-க்கு புறப்பட்டு மும்பைக்கு இரவு 8.15-க்கு சென்று சேரும். இந்த விமானச் சேவையானது திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு என வாரத்தின் 4 நாள்களுக்கு அமலில் இருக்கும்.
இந்த சேவை வரும் செப்.9 (புதன்கிழமை) முதல் தொடங்கவுள்ளது. திருச்சி உச்சிப்பிள்ளையாா் கோயில், மும்பை சித்திவிநாயகா் கோயில் ஆகிய விநாயகா் கோயில் மாநகரங்களை இணைப்பதற்காக இந்தச் சேவை தொடங்கவுள்ளது.












Click it and Unblock the Notifications