இந்த அகிலா அடிக்கும் கும்மாளத்தை பாருங்க.. 4 பேர் பாக்கறாங்கன்ற கூச்சமே "இவளுக்கு" இல்லையே, சீச்சீ!
திருச்சி: திருச்சியில் புதிதாக கட்டப்பட்ட குளத்தில் யானை அகிலா உற்சாகமாக குளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்று நீர் தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி திருக்கோயில். இங்கு அகிலா என்ற யானை 10 ஆண்டுகளாக தங்கி இறைபணி செய்து வருகிறது.
கோடைக் காலம் தொடங்கியவுடன் யானைகள் தேக்கம்பட்டி நல்வாழ்வு முகாமிற்கு கொண்டு செல்லப்படும். அங்கு யானைகளின் மன உளைச்சலை போக்கும் விதமாக அதற்கு பிடித்த மாதிரியான சூழலை அரசு அமைத்து தரும்.

மதம் பிடிக்காமல் இருக்க..
இந்த முகாம் முடிந்ததும் யானைகள் வழக்கமாக தங்கியிருந்த கோயில்களுக்கு அனுப்பப்படும். இதன் மூலம் யானைகள் மதம் பிடிக்காமல் இருக்க வழி வகுக்கும். இந்த நிலையில் தேக்கம்பட்டி முகாமுக்கு சென்றுவிட்டு வந்த யானை அகிலா திருச்சியிலும் அதே மனநிலையை அடைய வேண்டும் என்பதற்காக கோயில் வளாகம் ஒரு செயலை செய்துள்ளது.

குளம்
அதாவது கோயில் வளாகத்தில் நாச்சியார் தோப்பு பகுதியில் 20 அடி நீளம், 20 அடி அகலம், 6 அடி ஆழத்தில் தடுப்பு சுவர் கொண்ட குளம் கட்டப்பட்டுள்ளது. மேலும் அகிலா குளத்திற்குள் சென்று வருவதற்கு வசதியாக சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

முதல்முறை
நேற்று முதல் முறையாக அகிலா அந்த குளத்தில் இறங்கி உற்சாக குளியல் போட்டது. அதிலும் புதிய குளத்தில் இறங்கி இந்த அகிலா அடித்த லூட்டி இருக்கே, அப்பப்பா... இது குளியல் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. தும்பிக்கையை தண்ணீரில் விட்டு தலையை ஆட்டி ஆட்டி ரசிக்கிறது. ஒரு காலால் தண்ணீரை உதைப்பது போன்ற குசும்பு செயலிலும் இது ஈடுபட்டது.

நடைபயிற்சி
இதன் மூலம் யானையின் மனநிலை சீராக இருக்கும் என வனத்துறையினர் தெரிவிக்கிறார்கள். மேலும் இந்த அகிலா தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக கோயில் வளாகத்தில் மரங்கள் அமைத்து இயற்கையான வனப்பகுதியும் உருவாக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications