ஒரே கட்டடம்... 14 பேருக்கு கொரோனா.. திருச்சியில் செம ஷாக்.. மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை
திருச்சி: தினசரி கொரோனா பாதிப்பு திருச்சியில் 150ஆக அதிகரித்துள்ள நிலையில், ஸ்ரீரங்கம் அடுக்குமாடிக் குடியிருப்பில் அதிக பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்தக் கட்டடம் மூடப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பும் 3000ஐ கடந்துள்ளது. இதன் காரணமாக விரைவில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, சென்னை, கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவலின் வேகம் அதிகமாக உள்ளது. திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 150 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16,094 ஆக அதிகரித்துள்ளது.
அதிலும் ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் மட்டும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் பிரதான வாசல் மூடப்பட்டு உள்ளது. அந்த குடியிருப்பில் மொத்தம் 37 வீடுகள் உள்ளன.
சவுக்கு கட்டைகளால் வாசல் மூடப்பட்டுள்ளது. அதேநேரம் குடியிருப்பின் பக்கவாட்டு வாசல் வழியாக உள்ளே சென்று வர வசதி உள்ளது. அதிக பேருக்கு கொரோனா பரவியதைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் அங்குக் கிருமி நாசினியை தெளித்து சுத்தம் செய்தனர்.
இதுதவிர ஸ்ரீரங்கம் பகுதியில் ஒரு ஓட்டல், ஒரு வணிக வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவையும் மூடப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications