ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுக-வை அசைக்க கூட முடியாது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
திருச்சி: ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அசைக்கக் கூட முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலடி தந்துள்ளார்.
திருச்சி தொட்டியம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
தமிழக இளைஞர்களை புறக்கணித்து... பிற மாநிலத்தவருக்கு பணி வழங்குவதா..? TNPSC-க்கு ஸ்டாலின் கண்டனம்..!
ஸ்டாலின் பொய் பிரசாரம்
தமிழகத்தில் எந்த திட்டமும் நடக்கவில்லை என்று பொய் சொல்கிறார் மு.க.ஸ்டாலின். ஆனால் மக்கள் அனைவரும் அரசின் திட்டங்களால் பயனடைந்து வருகின்றனர்.
பிளவு ஏற்படுத்த முடியாது
அதிமுக அரசை கவிழ்க்க நடந்த அத்தனை முயற்சிகளும் தோல்வி அடைந்தன. அதிமுக வலிமையான கட்சியாக தற்போது உருவெடுத்திருக்கிறது. அதிமுகவில் யாராலும் பிளவு ஏற்படுத்த முடியாது.
ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் கூட...
ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தால் கூட்ட அதிமுகவை அசைக்க கூட முடியாது. அதிமுகவில் ஒருவர் கூட இதற்கான இடத்தை தந்துவிடமாட்டார்கள். இந்த இயக்கம் உழைப்பவர்களுக்கானது.
உழைப்பால் கிடைத்த பதவி
ஸ்டாலின் ஒன்றும் உழைத்து திமுக தலைவராகவில்லை. கருணாநிதியின் மகன் என்பதற்காகவே அவர் கட்சித் தலைவரானார். நான் கடுமையாக உழைத்தேன். முதல்வர் பதவியை அடைந்திருக்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.