உனக்கு என்னய்யா நாங்க தருவோம்.. இந்தாய்யா.. வாங்கிக்க.. கண்ணீரை வர வைக்கும் டெல்டா மக்கள்
உதவி புரிய வருபவர்களுக்கு டெல்டா மக்கள் இளநீர் தருகிறார்கள்.
திருச்சி: "எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கற எங்களால இதைதான் உங்களுக்கு தர முடிஞ்சுது" என்று நெகிந்து சொல்கிறார்கள் டெல்டா விவசாயிகள். அப்படி என்ன தந்தார்கள்? யாருக்கு தந்தார்கள்?
கஜாவின் சீற்றத்தால் டெல்டா விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து நின்று கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக நாகை, தஞ்சை, திருவாரூர், புதுகை, அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கஜாவின் தாக்கம் அதிகமாக இருந்தது.
அதனால்தான் புயல் அடிச்சு ஓய்ந்து போய் 4 நாள் ஆகியும் இன்னும் பழைய மாதிரி தங்களால் இயல்பான வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்க முடியவில்லை. சாப்பாடு, தண்ணி, மருத்துவ வசதி, கரண்ட் இப்படி எதுவுமே இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
[பால் விலை லிட்டர் 100 ரூபாய்.. தண்ணீர் குடம் 10 ரூபாய்.. பட்டுக்கோட்டையில் அக்கிரமம்! ]

நேரில் சென்று ஆறுதல்
அவர்களுக்கு தனியார் அமைப்புகள் முதல் தனிப்பட்ட நபர்கள் வரை உதவிக் கரம் நீட்டப்பட்டு வருகிறது. யாரும் யாருக்குமே சொல்லாமல், கட்டளையிடாமல், தாங்களாகவே ஆளாளுக்கு இறங்கி உதவி செய்து செய்துகிறார்கள். பிஸ்கட் பாக்கெட், தண்ணி, மெழுகுவர்த்தி, மருந்து மாத்திரைகள், கொசுவர்த்தி சுருள்கள் இப்படி என்னவெல்லாம் முடியுமோ அதையெல்லாத்தையும் கொண்டு போய் கொடுத்துவிட்டு டெல்டா மக்களை பார்த்து பேசி ஆறுதல் சொல்லிவிட்டு வருகிறார்கள்.

லாரி டிரைவர்கள்
இதுபோக, இளைஞர்களும், மாணவர்களும் தங்கள் ஏரியாக்களில் உள்ள பகுதி மக்களிடம் அத்தியாவசிய பொருட்களை வாங்கி லாரி, டெம்போக்களில் ஏற்றி பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் அனுப்பி வைத்து வருகிறார்கள். அவ்வளவு தூரத்தில் இருந்து பொருட்களை தூக்கிகொண்டு வரும் ஆட்களும், நிவாரண பொருட்களுடன் ஊருக்குள் நுழையும் லாரி டிரைவர்களுக்கும் டெல்டா மக்கள் இளநீர் கொடுத்து குடிக்க வைத்து அனுப்புகிறார்களாம்.

இளநீர் தருகிறார்கள்
ஊருக்குள் எங்கே பார்த்தாலும் தென்னையும், வாழையும் முறிந்து விழுந்து கிடக்கின்றன. அதனால் சிதறி கிடக்கும் இளநீரை வெட்டி சாப்பிட உதவி செய்ய வருபவர்களுக்கு தருகிறார்களாம். அங்கேயே கண் முன்னாலேயே சாப்பிடவும் வைக்கிறார்களாம். இதுபோக குலை குலையாக உள்ள இளநீர், வாழைகளை அவர்களிடம் கொடுத்து வீட்டுக்கு கொண்டு போகும்படி சொல்கிறார்களாம்.

இளகும் மக்கள்
உதவி செய்ய வரும் வண்டிகளை, காலியாக திருப்பி அனுப்பாமல் அதில் இளநீர், வாழைகளை போட்டு அனுப்பி வைக்கிறார்களாம். கொடுத்து கொடுத்து உதவியவர்கள் டெல்டா மக்கள்... கொடுத்தே பழக்கப்பட்ட இந்த மக்கள் இன்று நிர்க்கதியாக நின்றபோதும் கொடுக்கும் குணம் மாறவில்லை என்பதை மீண்டும் நிரூபித்து கொண்டுள்ளார்கள். தன்னையே இழந்தாலும் உதவுவது இளநீர் மட்டுமல்ல.. டெல்டா மக்களும்தான்!!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications