துளசி வாசம் மாறும்.. ஆனால் தவசி! அதிமுக கூட்டத்தில் பாமகவை சீண்டிய பிரேமலதா.. எடப்பாடிக்கு புகழாரம்
திருச்சி: ஒருவார்த்தை சொன்னால் சொன்னது தான்.. துளசி கூட வாசம் மாறும்.. ஆனால் தவசி வார்த்தை மாறியதாக வரலாறு இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். மேலும், அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாமகவையும் அவர் விமர்சித்து பேசினார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக தனி கூட்டணியில் தேர்தலை சந்திக்கிறது. தொகுதி பங்கீடு, வேட்பாளர்களை அறிவித்த அதிமுக இன்று கூட்டணி கட்சிகள் உள்பட 40 தொகுதிகளில் போட்டியிடும் தொகுதி வேட்பாளர்களை ஒரே மேடையில் இன்று எடப்பாடி பழனிசாமி அறிமுக செய்து வைத்தார். இந்த விழாவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

இரண்டு நாள் வரைக்கும் கூட்டணியில் இருக்கிறோம். இருக்கிறோம் என்று நாடகம் நடத்தியவர்கள் எல்லாம் தங்களுக்கு வேண்டியது கிடைத்த உடனேயே துண்ட காணும் துணியை காணும் என்று கூடாரத்தை காலி செய்துவிட்டு வேறு இடத்துக்கு சென்றுவிட்டார்கள். ஆனால் தேமுதிக அப்படியில்லை. ஒரு வார்த்தை சொன்னால், அந்த வார்த்தையில் உறுதியாக இருப்போம். இறுதியாக இருப்போம். நம்பிக்கையாக இருப்போம் என்பதை இந்த நேரத்தில் உறுதியாக சொல்கிறோம்.
ஏனென்றால் அண்ணன் எந்த மண்டலத்தை சேர்ந்தவர் என்றால் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். அவருடைய அமைச்சர்களும் கொங்கு மண்டலத்தை சேர்தவர்கள். கொங்கு மண்டலத்துக்காரர்கள் மரியாதை மிக்கவர்கள். அன்பானவர்கள். அதே போல நம்பிக்கைக்கு உரியவர்கள். இதனை ஒவ்வொரு முறையும் அண்ணன் நிரூபித்து காட்டியிருக்கிறார்கள். எத்தனையோ முதல்வர்களை நாங்கள் பார்த்திருக்கிறோம்.
3 வருடமாக செங்கல்லை காட்டுகிறார் உதயநிதி.. நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டியதுதானே.. எடப்பாடி அட்டாக்
எடப்பாடி பழனிசாமி அண்ணன் பண்போடும், பாசத்தோடும், மரியாதையோடும், மிக கண்ணியத்தோடும் இருக்கின்ற சிறந்த உதாரணம் என்பதை இந்த நேரத்தில் நான் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன். அவருடன் இருக்கின்ற அமைச்சர்கள் பெருமக்கள் அத்தனை பேரும் நாட்டிற்கு சிறந்த உதாரணங்களாக புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா, அண்ணன் எடப்பாடி பழனிசாமி வழிநடத்தி செல்கிறார்கள்.
இதனால் தான் சொல்கிறேன், கேப்டன் வளர்த்த கட்சியும் நியாயத்திற்கும் தர்மத்திற்கும் தான் நாங்கள் துணை நிற்போமே தவிர ரவுடிசத்திற்கும், கொலை, கொள்ளைக்கும் நாங்கள் துணை நிற்க மாட்டோம். ஒருவார்த்தை சொன்னால் சொன்னது தான்,.. துளசி கூட வாசம் மாறும்.. ஆனால் தவசி வார்த்தை மாறியதாக வரலாறு இல்லை.
இதனால் அண்ணன் வீட்டுக்கு வரும்போது உறுதியளித்தோம். அப்போது என்ன ஆனாலும், இறுதி வரை உங்களுடன் இருப்போம். என்று வாக்குறுதி கொடுத்தேன். அதேபோல் உறுதியாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இருக்கிறோம். இந்த தேர்தலில் மட்டும் இல்லை, 2026 தேர்தலிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications