Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துளசி வாசம் மாறும்.. ஆனால் தவசி! அதிமுக கூட்டத்தில் பாமகவை சீண்டிய பிரேமலதா.. எடப்பாடிக்கு புகழாரம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: ஒருவார்த்தை சொன்னால் சொன்னது தான்.. துளசி கூட வாசம் மாறும்.. ஆனால் தவசி வார்த்தை மாறியதாக வரலாறு இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். மேலும், அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாமகவையும் அவர் விமர்சித்து பேசினார்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக தனி கூட்டணியில் தேர்தலை சந்திக்கிறது. தொகுதி பங்கீடு, வேட்பாளர்களை அறிவித்த அதிமுக இன்று கூட்டணி கட்சிகள் உள்பட 40 தொகுதிகளில் போட்டியிடும் தொகுதி வேட்பாளர்களை ஒரே மேடையில் இன்று எடப்பாடி பழனிசாமி அறிமுக செய்து வைத்தார். இந்த விழாவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

DMDK will keep his word Premalatha Praises AIADMK Edappadi Palaniswami at trichy Rally


இரண்டு நாள் வரைக்கும் கூட்டணியில் இருக்கிறோம். இருக்கிறோம் என்று நாடகம் நடத்தியவர்கள் எல்லாம் தங்களுக்கு வேண்டியது கிடைத்த உடனேயே துண்ட காணும் துணியை காணும் என்று கூடாரத்தை காலி செய்துவிட்டு வேறு இடத்துக்கு சென்றுவிட்டார்கள். ஆனால் தேமுதிக அப்படியில்லை. ஒரு வார்த்தை சொன்னால், அந்த வார்த்தையில் உறுதியாக இருப்போம். இறுதியாக இருப்போம். நம்பிக்கையாக இருப்போம் என்பதை இந்த நேரத்தில் உறுதியாக சொல்கிறோம்.

ஏனென்றால் அண்ணன் எந்த மண்டலத்தை சேர்ந்தவர் என்றால் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். அவருடைய அமைச்சர்களும் கொங்கு மண்டலத்தை சேர்தவர்கள். கொங்கு மண்டலத்துக்காரர்கள் மரியாதை மிக்கவர்கள். அன்பானவர்கள். அதே போல நம்பிக்கைக்கு உரியவர்கள். இதனை ஒவ்வொரு முறையும் அண்ணன் நிரூபித்து காட்டியிருக்கிறார்கள். எத்தனையோ முதல்வர்களை நாங்கள் பார்த்திருக்கிறோம்.

3 வருடமாக செங்கல்லை காட்டுகிறார் உதயநிதி.. நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டியதுதானே.. எடப்பாடி அட்டாக்


எடப்பாடி பழனிசாமி அண்ணன் பண்போடும், பாசத்தோடும், மரியாதையோடும், மிக கண்ணியத்தோடும் இருக்கின்ற சிறந்த உதாரணம் என்பதை இந்த நேரத்தில் நான் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன். அவருடன் இருக்கின்ற அமைச்சர்கள் பெருமக்கள் அத்தனை பேரும் நாட்டிற்கு சிறந்த உதாரணங்களாக புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா, அண்ணன் எடப்பாடி பழனிசாமி வழிநடத்தி செல்கிறார்கள்.

இதனால் தான் சொல்கிறேன், கேப்டன் வளர்த்த கட்சியும் நியாயத்திற்கும் தர்மத்திற்கும் தான் நாங்கள் துணை நிற்போமே தவிர ரவுடிசத்திற்கும், கொலை, கொள்ளைக்கும் நாங்கள் துணை நிற்க மாட்டோம். ஒருவார்த்தை சொன்னால் சொன்னது தான்,.. துளசி கூட வாசம் மாறும்.. ஆனால் தவசி வார்த்தை மாறியதாக வரலாறு இல்லை.

இதனால் அண்ணன் வீட்டுக்கு வரும்போது உறுதியளித்தோம். அப்போது என்ன ஆனாலும், இறுதி வரை உங்களுடன் இருப்போம். என்று வாக்குறுதி கொடுத்தேன். அதேபோல் உறுதியாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இருக்கிறோம். இந்த தேர்தலில் மட்டும் இல்லை, 2026 தேர்தலிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+