பீகார் போல் விட்டுவிடக் கூடாது.. வாக்காளர் பட்டியலில் கவனம் ரொம்ப முக்கியம்.. கே.என்.நேரு அட்வைஸ்!
திருச்சி: பீகார் போல் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்தாமல் விட்டுவிடக் கூடாது என்று திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒன்றியச் செயலாளர்கள் கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ள அவர், வாக்காளர் பட்டியலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.
அண்மையில் பீகார் மாநிலத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெற்றது. அதன்படி, பீகாரில் இருந்து வெளி மாநிலங்களுக்குக் குடி பெயர்ந்தவர்கள் பெயர் அங்குள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்த மாநிலத்தில் எந்த தொகுதியில் வசிக்கிறார்களோ, அங்கு அவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த கணக்கின்படி பார்த்தால், சுமார் 6.5 லட்சம் பீகார் வாக்காளர்கள் தமிழ்நாட்டில் பணி செய்து வருகிறார்கள். இவர்களின் பெயர்கள் பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதால், இனி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம். சென்னையில் மட்டும் 3.5 லட்சம் பீகார் வாக்காளர்கள் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும் அதிகளவில் இருப்பார்கள். இதனால் வெளிமாநில வாக்காளர்கள் அதிகளவில் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டால், அது தமிழ்நாட்டின் அரசியலிலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பெறும் வேட்பாளர்களின் வெற்றி, வடமாநில வாக்காளர்களால் மாற்றம் அடைய வாய்ப்புகள் உள்ளது.
அதேபோல் வீடற்றவர்களுக்கு 0 என்ற பதிவெண் அளிக்கப்பட்டு பீகார் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. இதனால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அதேபோல் வாக்காளரின் புகைப்படம் இருக்கும் இடத்தில் அவெஞ்சர்ஸ் படத்தின் தானோஸ் படம் வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் தாக்கம் இந்தியா முழுவதும் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்னும் 7 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இதனால் இம்முறை திமுகவினர் வாக்காளர் பட்டியல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், பீகார் போல் வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்தாமல் விட்டுவிடக் கூடாது. 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒன்றிய செயலாளர்கள் கவனத்துடன் பணியாற்ற வேண்டும். வாக்காளர் பட்டியலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் பூத் கமிட்டி நிர்வாகிகள் இம்முறை வாக்காளர் பட்டியலில் தீவிர கவனம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications