இலவச மின்சாரம் ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
திருச்சி: தமிழகத்தில் இலவச மின்சாரம் தொடரும் என்றும் இந்த திட்டம் ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் தனது தலைமையிலான அரசு விவசாயிகளுக்கான அரசு என முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.
காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக 50 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனைக்கு அதிமுக அரசு தீர்வு பெற்றுக்கொடுத்ததாக முதல்வர் கூறினார்.

முக்கொம்பில் ஆய்வு
திருச்சி மாவட்டம் முக்கொம்பில் நடைபெற்று வரும் அணை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக திருச்சி மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட ரூ.25 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தவாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

நெல் கொள்முதல்
தமிழகத்தில் நடப்பது விவசாயிகளுக்கான அரசு என்றும், விவசாயிகளுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு எனவும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். இந்த ஆண்டு 27 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறியதோடு, கொள்ளிடத்தில் ரூ.495 கோடி மதிப்பில் புதிய கதவணை கட்டும் பணி நடந்து வருவதாக தெரிவித்தார். கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லும் வகையில் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

காவிரி நதிநீர்
காவிரி நதிநீர் பிரச்சனையை பொறுத்தவரை கடந்த 50 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்ததாகவும் அதற்கு அதிமுக அரசு தீர்வு பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். குறுவை சாகுபடிக்காக பல ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 12-ம் தேதி குறித்த காலத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார். மேலும், கர்நாடகாவில் இருந்து உரிய அளவு தண்ணீர் பெற ஆணையம் மூலம் முறையாக வலியுறுத்தி பெறப்படும் எனக் கூறினார்.

செய்தியாளர் கேள்வி
இதனிடையே இலவச மின்சாரம் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் இலவச மின்சாரம் தொடரும் என்றும் இதில் மாற்றுக் கருத்துக்கு இடம் கிடையாது எனவும் உறுதியளித்தார். புதிய மின்சார திருத்தச் சட்டத்திற்கு மாநிலங்களின் கருத்து கேட்கப்பட்டுள்ள நிலையில் இலவச மின்சார விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை முதல்வர் தெளிவுபடுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications