மீண்டும் துயரம்... புயலால் வாழைகள் நாசம்.. லால்குடி விவசாயி தற்கொலை
திருச்சி : கஜா புயலால் சேதம் அடைந்த வாழைத்தோட்டத்திலேயே, விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி சுண்ணாம்புகார தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (42). விவசாயி. இவரது மனைவி தேவி. ரவிச்சந்திரன் 2½ ஏக்கர் பரப்பளவில் வாழை நடவு செய்து இருந்தார். பொங்கல் பண்டிகையையொட்டி வாழைத்தார் வெட்டும் தருவாயில் இருந்தது. இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி தாக்கிய கஜா புயலால் ரவிச்சந்திரன் பயிரிட்டு இருந்த சுமார் 2,500 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. பெங்களூரு சென்று இருந்த ரவிச்சந்திரனுக்கு இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி அவர் வீடு திரும்பினார்.

புயலால் சாய்ந்த வாழை மரங்களை பார்ப்பதற்காக அவர் வயலுக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ரவிச்சந்திரனின் வாழைத்தோட்டத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு ரவிச்சந்திரன் வாழை சேதம் அடைந்த விரக்தியில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து ரவிச்சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 4 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்த நிலையில் காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கஜா புயலுக்கு வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து நாசமானதால் விவசாயி வாழைத்தோட்டத்திலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊருக்கே சோறு போட்ட, டெல்டா பகுதி விவசாயிகளின் தொடர் மரணம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. விவசாயிகளின் தற்கொலையை தடுக்க அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.
-
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications