விலை கிடைக்காத வாழைத்தார்கள்... இலவசமாக கொடுத்து நெகிழ வைத்த விவசாயிகள்..
திருச்சி: ஊரடங்கு காரணமாக வாழைப்பழங்களை சந்தைப்படுத்த முடியாததால், அவற்றை இலவசமாக கொடுத்து நெகிழவைத்துள்ளனர் திருச்சி மாவட்ட வாழை விவசாயிகள்.
காவிரி கரையோர பகுதிகளான திருச்சி மாவட்டம் குடமுருட்டியில் தொடங்கி கரூர் மாவட்டம் குளித்தலை வரை வாழை சாகுபடி அதிகளவில் நடைபெறும். இதேபோல், குளித்தலை, அய்யர்மலை பகுதிகளிலும் பெரியளவில் வாழை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வாழைத்தார்களை விவசாயிகளால் சந்தைப்படுத்த முடியாமல் தடுமாறி வருகின்றனர்.

வியாபாரிகள் மிகவும் சொற்ப விலைக்கு வாழைத்தார்களை கேட்பதால் அதற்கு கொடுக்க மனமின்றி தூய்மைப் பணியாளர்களுக்கும், பசியால் வாடுபவர்களுக்கு இலவசமாகவே வாழைப்பழங்களை தருவது என முடிவெடுத்தனர். அதனடிப்படையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 20,000 வாழைப்பழங்களை திருச்சி மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்து அதனை ஏழை எளியோருக்கும், துப்புரவு பணியாளர்களுக்கு கொடுக்குமாறு நெகிழ வைத்துள்ளனர்.

வாழை விவசாயிகளின் இந்த மனிதநேய உதவிக்கு திருச்சி மாநகராட்சி ஆணையர் உட்பட அதிகாரிகள் நன்றி தெரிவித்துக்கொண்டனர். விவசாயிகளின் ஆசையை நிறைவேற்றும் வகையில் மாநகராட்சியில் தூய்மைப் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு சீப் வாழைப்பழங்கள் கொடுக்கப்பட்டன.

இதனிடையே இனி வரும் காலத்தில் வாழைப்பழத்திற்கு அரசே விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளால் குளிர்பதனக்கிடங்கில் பழங்களை சேமிக்க முடியாததால் இப்படி இனாமாக வழங்கி வருவதாகவும் வாழை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
-
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications