குவைத்தில் இருந்து திருச்சி வந்த 120 பயணிகள்.. 2 பேருக்குக் காய்ச்சல்.. மருத்துவமனையில் அனுமதி
திருச்சி: குவைத்தில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று மாலை வந்த பயணிகளில் 2 பேருக்குக் காய்ச்சல் இருந்ததால் அவர்களை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
திருச்சி விமான நிலையத்தில் குவைத் நாட்டில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை வருகை புரிந்த 120 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று மாலை குவைத் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் 120 பயணிகள் வருகை புரிந்தனர். நேற்று மாலை பல்வேறு மாவட்டங்களில் உள்ள குவைத் வாழ் தமிழர்கள் 120 பேர் திருச்சிக்கு திரும்பினர்.
மாவட்டம் வாரியாக அவர்களது பட்டியலின்படி, அரியலூர் 3, சென்னை 3, கோயம்புத்தூர் 1, கடலூர் 7, கள்ளக்குறிச்சி 1, காஞ்சிபுரம் 3, கன்னியாகுமரி 4, மதுரை 2, மயிலாடுதுறை 2, நாகப்பட்டிணம் 4, நாமக்கல் 1, பெரம்பலூர் 3, புதுக்கோட்டை 10, இராமநாதபுரம் 12, சேலம் 3, சிவகங்கை 7, தஞ்சாவூர் 17, திருப்பூர் 1, திருவண்ணாமலை 7, திருவாரூர் 5, திருச்சி 5, விழுப்புரம் 7, விருதுநகர் 2 என 118 பயணிகளும், ஆந்திரபிரதேசத்தில் இருந்து 1 பயணியும், இதர நபர் ஒருவரும் என மொத்தம் 120 பயணிகள் திருச்சி வந்தனர்.
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டுதலின்படி, சுகாதாரத்துறையினர் மூலம் விமான நிலையத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், குவைத் நாட்டில் இருந்து வந்த 2 நபர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள நபர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு சிறப்பு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந் நிகழ்ச்சியில் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் எஸ்.விஸ்வநாதன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் சுப்ரமணி, திருச்சி கிழக்கு வட்டாட்சியர் மோகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications