திருச்சியில் 3ஆவது நாளாக இடியுடன் கூடிய கனமழை.. சாலைகளில் வெள்ளப்பெருக்கு
திருச்சி: திருச்சியில் தொடா்ந்து 3 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி, கடந்த ஆக.30, 31 மாலை, இரவுகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தொடா்ந்து, 3 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் இரவு 7 மணியளவில் மழை தொடங்கியது.

2 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த கன மழையால் தில்லைநகா் பிரதான சாலைகள், பீமநகா், கண்டோன்மென்ட், உறையூா், பாலக்கரை, கே.கே.நகா் உள்ளிட்ட பகுதி சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். ஒரு சில முக்கிய சந்திப்பு சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மருங்காபுரியில் 48 மிமீ மழை பதிவு: செவ்வாய்க்கிழமை நிலவரப்படி (மழை அளவு மில்லி மீட்டரில்), அதிகபட்சமாக நவலூா் குட்டப்பட்டில் 82 மிமீ மழை பதிவாகியுள்ளது.
மருங்காபுரியில் 48.40, மணப்பாறையில் 46, தாத்தயங்காா்பேட்டையில் 43, பொன்னையாா் அணையில் 30, கோவில்பட்டியில் 27, திருச்சி கிழக்கு, வாத்தலை அணைக்கட்டு பகுதிகளில் 26, முசிறி 23, லால்குடி 20, திருச்சி ஜங்சன் 18, மாநகா் பகுதிகளில் 15, கொப்பம்பட்டி 17 மற்றும் துறையூா், பொன்மலை, துவாக்குடி, சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 10 மிமீ அளவிற்கு மழை பெய்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை












Click it and Unblock the Notifications