வருது... வருது... பொங்கல் பானை வருது... மண்பானைகள் தயாரிப்பில் தொழிலாளர்கள் மும்முரம்
திருச்சி: திருச்சி அருகே கொண்டயம்பேட்டையில் பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
அறுவடைத்திருநாள் எனப்படும் தைப்பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 13 நாட்களே உள்ளன. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகயை வீடுகளில் மண்பானையில் பச்சரிசியால் பொங்கலிட்டு சூரியபகவானுக்கு படையலிட்டு வழிபடுவது தமிழர்களின் வழக்கமாகும்.
நகரம், கிராமம் என்ற பாகுபாடு இன்றி அனைத்து குடும்பங்களிலும் மண் பானையில் பொங்கலிடுவது அன்று முதல் இன்று வரை தொன்று, தொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் மரபாக உள்ளது. அதற்காக பானைகள் தயாரிக்கும் வேலையில் தமிழகம் முழுக்க உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் களத்தில் உள்ளனர்.

தயாராகும் மண்பானைகள்
அதன் ஒருபகுதியாக திருச்சி மாவட்டத்திலும் மண்பானைகள் தயாரிப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் பானைகள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், காவிரி கரை மண்ணில் தயாரிக்கப்படும் பொங்கல் பானைகளுக்கு தான் தனி மவுசு உள்ளது.

ஆற்றங்கரையில் தயாரிப்பு
திருச்சி திருவானைக்காவல் அருகே உள்ள கொண்டயம்பேட்டையில் பொங்கல் பானைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றங்கரையில் குடிசைகள் அமைத்து தொழிலாளர்கள் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். முழுமை பெற்ற பொங்கல் பானைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்துள்ளனர்.

ஆர்வமுடன் வரும் வியாபாரிகள்
பார்க்க, பார்க்க அழகாக இருக்கும் அந்த பானைகளை வியாபாரிகள் நேரடியாக இங்கு வந்து பொங்கல் பானைகளை வாங்கி செல்கின்றனர். காவிரி கரை மண்ணில் தயாரிக்கப்படும் பொங்கல் பானைகளுக்கு தான் தனி மவுசு என்பதால் நேரடியாக வந்து வாங்கி செல்வதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தொழிலாளர்கள் தீவிரம்
ஆகையால், அதிகளவு பொங்கல் பானைகளை தயாரிக்க மண்பாண்ட தொழிலாளர்கள் களமிறங்கி உள்ளனர். ஆனால், நாகரீக மோகத்தால் மண்பானைகளை வாங்கும் எண்ணம் குறைந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

விற்கப்படும் பானைகள்
இது குறித்து, பொங்கல் பானைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஒரு தொழிலாளி கூறுகையில், பொங்கல் பானை விற்பனை இன்னும் சூடு பிடிக்கவில்லை. நாகரிக மோகம் அதிகரித்து வருவதால் மண்பானைகளில் பொங்கலிடுவதை மக்கள் மறந்து வருகிறார்கள். ஏற்கனவே கோவில் சன்னதிகளில் விளக்கு ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் மண்ணால் தயாரிக்கப்படும் அகல் விளக்கு விற்பனை அடியோடு முடிந்து போய்விட்டது. மண் பானை, மண்சட்டி சமையலுக்கு மக்கள் மாறினால் எங்கள் வாழ்வாதாரம் மேம்படும் என்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications