லலிதா ஜுவல்லரி கொள்ளை.. மாஸ்டர் மைண்ட் முருகனை நெருங்கியது போலீஸ்.. முக்கிய உறவினர் அதிரடி கைது!
திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளைக்கு மாஸ்டர் மைண்டாக செயல்பட்ட கொள்ளையன் முருகனின் உறவினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளைக்கு மாஸ்டர் மைண்டாக செயல்பட்ட கொள்ளையன் முருகனின் உறவினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. கடந்த 2ம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை நடந்தது.
சுவரில் துளையிட்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள், பொம்மை முகமூடிகளை அணிந்து கொள்ளை அடித்தனர். மொத்தம் 30 கிலோ தங்க நகைகள் அந்த பகுதியில் கொள்ளையடிக்கப்பட்டது.

என்ன கைது
முதலில் இந்த கொள்ளையை வட இந்தியர்கள் செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. அதன்பின் சிசிடிவி காட்சிகளில் தெரிந்த கொள்ளையர்களின் கால் நிறத்தை வைத்து, கொள்ளையடித்தது தமிழர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சி, தஞ்சை, திருவாரூரில் தீவிர வாகன சோதனை நடந்தது.

இரண்டு பேர் சிக்கினார்கள்
இந்த சோதனையில் திருவாரூரில் இரண்டு பேர் சிக்கினார்கள். விலை உயர்ந்த பெட்டிகளை கொண்டு காரில் சென்ற மணிகண்டன் என்பவரை கைது செய்தனர். அவருடன் வந்த சுரேஷ் என்ற நபர் மாயமானார். இதையடுத்து தற்போது போலீசார் சுரேஷின் தாயை கைது செய்தனர்.

என்ன விசாரணை
இவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள்தான் கொள்ளையடித்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களுக்கு மூளையாக முருகன் என்ற நபர் செயல்பட்டதும், அவர்களுக்கு பின் பெரிய குழு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து முருகனை தற்போது போலீசார் தேடி வருகிறார்கள்.

தீவிரம்
இவரை கைது செய்ய முடியாமல் போலீஸ் திணறி வருகிறது. தனிப்படை அமைத்தும் போலீசால் அவரை கைது செய்ய முடியவில்லை. இந்த நிலையில் நேற்று முருகனின் அண்ணன் மகன் முரளியை போலீசார் கைது செய்தனர்.

எப்படி தற்போது
தற்போது இன்று காலை முருகனின் உறவினர் பிரதாப் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரிடமும் காலையில் இருந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இவர்களிடம் செய்யப்படும் விசாரணை மூலம் முருகனை விரைவில் போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications