ரஜினிகாந்த் கனவு என கூறியது இப்போது நனவாகிவிட்டதே.. அமைச்சர் செங்கோட்டையன்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: ரஜினிகாந்த் கனவு என கூறியது நனவாகத்தான் இருக்கிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் இணைந்து குடிமராமத்து திட்டம் , தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்வது, விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் என இரவு பகல் பாராமல் உழைத்து கொண்டிருக்கிறார்கள்.

Minister Sengottaiyan says that it is in real which Rajinkanth said it was dream

தமிழகத்தின் முதல்வராவேன் என 2 ஆண்டுக்கு முன்பு எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என ரஜினிகாந்த் கூறியுள்ளார். அவர் கூறியது கனவு என்பது அல்ல, அது நனவாகத்தான் இருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் பல முறை இந்த ஆட்சி விரைவில் போய்விடும். ஆனால் சட்டசபையில் 122 பேர் இருந்தோம். தற்போது 124 பேராகிவிட்டோம். மக்கள் உள்ளங்களில் முதல்வர் நிறைந்திருக்கிறார்.

5,8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு மட்டும் தான் பொதுத் தேர்வு நடைபெறும். மாணவர்கள் இடைநிற்றல் என்கிற நிலைக்கு தமிழகம் வழிவகுக்காது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+