எப்படியாச்சும் என் மகனை காப்பாத்துங்க.. கதறி அழுத சுஜித் தாயார்.. கலங்கி நின்ற ஜோதிமணி
எம்பி ஜோதிமணியிடம் சுஜித்தின் தாய் கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளார்
Recommended Video
மணப்பாறை: "என் குழந்தையை எப்படியாவது காப்பாத்தி தந்திடுங்க" என்று குழந்தை சுஜித்தின் தாயார் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியிடம் கண்ணீர் மல்க கேட்டு கொண்டுள்ளார். அதற்கு "சுஜித் நிச்சயம் மீட்கப்படுவான்" என்று எம்பி நம்பிக்கை வார்த்தை தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 5.40- மணிக்கு ஆழ்துறை கிணற்றில் 2 வயது குழந்தை சுஜித் தவறி விழுந்துவிட்டான். 70 அடி ஆழத்தில் குழந்தை உள்ளதால், அவனை பத்திரமாக மீட்கும் பணி 21 மணி நேரத்தை கடந்து நடந்து வருகிறது.
இதற்காக தேசிய - மாநில பேரிடர் மீட்பு குழு கூட்டு முயற்சியில் இறங்கி வருகிறது. குழந்தை இடுக்கி போன்ற குழந்தையை பத்திரமாக மீட்க கோரி உலக மக்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். கிணற்றில் விழுந்து 21 மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டதால், உணவு, தண்ணீரின்றி குழந்தை தவித்து வருகிறது.
ஆனால் தொடர்ந்து ஆக்சிஜன் சுஜித்துக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் இடுக்கி போன்ற பொருட்களை வைத்து குழந்தையை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.
இதனிடையே குழந்தையின் தாயை காங்கிரஸ் எம்பி ஜோதிமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். "என் குழந்தையை எப்படியாவது காப்பாற்றி தந்துவிடுங்கள்" என்று ஜோதிமணியிடம் தாயார் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார். அதற்கு ஜோதிமணி, சுஜித் நிச்சயம் மீட்கப்படுவான் என்று அவருக்கு நம்பிக்கை தெரிவித்தார்.
இறைவனே கதி.. சுஜித் நலமாக மீட்கப்பட வேண்டும்.. நாகூர், வந்தவாசியில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, "கனத்த இதயத்துடன் நின்று கொண்டிருக்கிறோம். ஆழ்துளை கிணறு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும். ஆழ்துளை கிணறு தொடர்பாக அரசு விதிமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
மணப்பாறை நடுக்காட்டுப் பட்டியில் குழந்தை ஒன்று ஆழ்குழாய்க்கிணற்றுக்குள் விழுந்துள்ள சம்பவம் மிகுந்த துயரளிக்கிறது.இன்று நடைபெற்ற OBCகமிட்டி கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி வந்துள்ளேன். மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பேசியுள்ளேன். அவரும்,மீட்புக் குழுவினரும் அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்
— Jothimani (@jothims) October 25, 2019
தற்போது குழந்தை நலமாக இருப்பதாகவும்,மீட்டு விட முடியும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் உறுதி அளித்துள்ளர். ஆனாலும் உள்ளே இருக்கும் குழந்தை அனுபவிக்கும் வேதனையை, பயத்தை நினைத்து மனது வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவு வலிக்கிறது.
— Jothimani (@jothims) October 25, 2019
பெற்றோர்களும், ஊர் மக்களும் மீட்பு பணிக்கு ஒத்துழைக்கும் படி பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்.
— Jothimani (@jothims) October 25, 2019