ஹேப்பி நியூஸ்.. சாந்திக்கு 12வது குழந்தை பிறந்திருச்சு.. வீட்டுலதான்.. சுகப்பிரசவம்தான்!
முசிறி சாந்திக்கு 12-வது குழந்தை வீட்டிலேயே பிறந்தது.
Recommended Video

திருச்சி: ஒரு ஹேப்பி நியூஸ்!! சாந்திக்கு குழந்தை பிறந்திடுச்சாம்... எந்த சாந்தி தெரியுமா? ஆஸ்பத்திரி பக்கமே பிரசவத்துக்கு போக மாட்டேன் என்று அடம் பிடித்து நர்சுகளை எல்லாம் அலற விட்டு ஓட விட்டாரே... அந்த சாந்திக்குத்தான் குழந்தை பிறந்துள்ளது!!
முசிறியை சேர்ந்த காதல் ஜோடிதான் கண்ணன்-சாந்தி. கண்ணனுக்கு 47 வயது, சாந்திக்கு 45 வயது. 20 வருஷங்களுக்கு முன்னாடி கல்யாணம் ஆயிடுச்சு. இவங்களுக்கு 11 குழந்தைகள். இதில் 3 மகள்களுக்கு கல்யாணம் ஆகி சாந்தியும் - கண்ணனும் தாத்தா, பாட்டி ஆகிவிட்டார்கள்.
ஆனாலும் சாந்தி 12-வதாக கர்ப்பம் ஆனார். இந்த விஷயம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தெரியவர, பிறகு தாய், சேய் நல அலுவலரும், ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸ்களும் சாந்தியை ஆஸ்பத்திரிக்கு கூட்டி வர அவரது வீட்டுக்கு போனார்கள். ஆனால் சாந்தி எஸ்கேப்!! நர்சுகள் வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதை பார்த்த சாந்தி, காவிரி ஆற்றங்கரை பக்கம் அவசர அவசரமாக கிளம்பி போய் மறைந்து கொண்டார்.

கண்ணில் சிக்கவில்லை
இதற்கு காரணம், 11 குழந்தைகளையும் சாந்தி வீட்டில்தான் பெற்றெடுத்தாராம். ஆஸ்பத்திரி பக்கமே போனதில்லையாம். பிரசவ நேரத்தில் மிஸ்டர் கண்ணன் உதவி செய்வாராம். 12-வது குழந்தையையும் வீட்டில்தான் பெற்றெடுப்பேன் என்பதுதான் சாந்தியின் பிடிவாதம். இப்போது மெடிக்கல் ஆபீசர்கள் வந்து ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய்விடுவார்கள் என்று பயந்துதான் சாந்தி அவர்களின் கண்ணில் சிக்காமல் கிளம்பினார்.

அக்கப்போர் செய்த சாந்தி
ஆனால் எல்லோரும் சேர்ந்து சாந்தியை ஆற்றங்கரை பக்கம் கண்டுபிடித்து விட்டார்கள். சாந்தியை ஆஸ்பத்திரிக்கு நர்சுகள் அழைக்க, மாட்டவே மாட்டேன் என்று சாந்தி பிடிவாதம் பிடிக்க.. ஒரே அக்கப்போர் ஆகிவிட்டது. ஒருவழியாக ஆஸ்பத்திரிக்கு சாந்தியை அழைத்து கொண்டு போய் கிராம சுகாதார செவிலியர் சுப்புலட்சுமி மருத்துவமனையில் அட்மிட் செய்தார்கள்.

சுகப்பிரசவம்
செக்-அப் செய்த டாக்டர்கள் சாந்திக்கு ரத்தசோகை இருப்பதாக சொன்னார்கள். பிறகு அதற்கான சிகிச்சையும் நடந்தது. இதன்பிறகு, பிரசவத்துக்கு மருத்துவமனை வருமாறு ஆஸ்பத்திரியில் அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார்கள். இந்நிலையில் தற்போது சாந்திக்கு குழந்தை பிறந்துவிட்டது. அழகான பெண் குழந்தை பிறந்தது. விசேஷம் என்னவென்றால், அவ்வளவு சொல்லியும் இந்த 12-வது குழந்தையையும் வீட்டில்தான் பெற்றெடுத்தார் சாந்தி. அதுவும் சுகப்பிரசவம்!!

கண்டிப்பா கு.க.???
இதன்பிறகுதான் சாந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் கூறப்படுகிறது. குழந்தை பிறந்ததை பற்றி சாந்தியிடம் கேட்டால், "நானே வழக்கம்போல் பிரசவத்தை பார்த்துக் கொண்டேன்... உதவிக்கு என் புருஷன் இருந்தார்" என்றும் கூறியுள்ளார். எப்படியோ, கண்டிப்பாக ஆஸ்பத்திரியில சாந்திக்கு கு.க. பண்ணிதான் அனுப்புவாங்க போல!!
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications